இன்றைய ராசி பலன் – 12.02.2022
இன்றைய பஞ்சாங்கம்,12-02-2022, தை 30, சனிக்கிழமை, ஏகாதசி திதி மாலை 04.28 வரை பின்பு வளர்பிறை துவாதசி. மிருகசீரிஷம் நட்சத்திரம் காலை 06.37 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
மேஷ ராசி நேயர்களே:உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சகோதரர்கள் குடும்பம் தொடர்பான விஷயத்தில் உங்களிடம் ஆலோ சனை கேட்டு வருவார்கள்.தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். சிலருக்கு அவ்வப்போது சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சிலருக்கு நண்பர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் நிலை உருவாகும். தாய்வழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்புத் தருவார்.வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம்.
மிதுன ராசி காரர்களே:சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.பிள்ளைகளின் உற்சாகம் உங்களையும் தொற்றிக்கொள்ளும்.குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனு கூலமாக முடியும்.
கடக ராசி நேயர்களே:குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும்.
சிம்ம ராசி அன்பர்களே:பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உங்கள் தேவையறிந்து நண்பர் செய்யும் உதவி மகிழ்ச்சி தரும்.எந்த செயலையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.
கன்னி ராசி காரர்களே:உறவினர் நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள்.பெரியவர்களின் ஆலோசனை அவசியம். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். சிலர் உங்களை நம்பிமுக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் அவ சியம். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.
துலாராசி உறவுகளே:குடும்பத்தினருடன் மாற்று கருத்துக்கள் ஏற்படலாம்.சிலருக்கு வாழ்க்கைத்துணையின் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உங்கள் முயற்சியில் எதிர்ப்புகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள்.டுத்த காரியம் வெற்றி பெற சற்று கூடுதல் முயற்சி தேவை. உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன்- மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே: ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சில ருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.நியாயத்தை பேசப் போய் பெயரைக்கெடுத்துக் கொள்ள நேரிடும். குடும்பத்தில் வீண் சச்சரவுகள் ஏற்படும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தூர பயணங்களில் கவனம் தேவை.வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.
தனுசு ராசி அன்பர்களே:எதிர்பாராத சந்திப்பு நிகழும். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாக கணவன் – மனைவிக்கிடையே பிரச்னை ஏற்படக்கூடும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். வேற்றுமதத்தவர் உதவுவார். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் மறையும்.உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும்.
மகர ராசி காரர்களே:நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
கும்ப ராசி உறவுகளே:பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். தாயிடம் கேட்ட உதவி கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.உடல்நலனில் கவனம் தேவை.வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளுடன் தேவையற்ற அலைச்சலும் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம்.அடிக்கடி மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற் பட்டு நீங்கும்.
மீன ராசி நேயர்களே:
பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம்.வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.கடந்த கால இனியஅனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். குடும்பத்தினர் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். வாகனங்களால் விரயங்கள் ஏற்படும்.