இன்றைய ராசி பலன் – 13.03.2021
இன்றைய பஞ்சாங்கம், 13-03-2021, மாசி 29 , சனிக்கிழமை, அமாவாசை திதி பகல் 03.51 வரை பின்பு வளர்பிறை பிரதமை. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 12.22 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் இரவு 12.22 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. மாசான கொள்ளை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
மேஷ ராசி நேயர்களே:
விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பிள்ளைகள் ஆலோசனை கேட்டு வருவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுகொடுப்பீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:
திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
மிதுன ராசி காரர்களே:
மறதியால் பிரச்சினை வரக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
கடக ராசி நேயர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும்.அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போங்கள். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை.வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். உணர்ச்சி வசப்படாதீர்கள்
சிம்ம ராசி அன்பர்களே:
நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள்.முக்கியப் பிரமுகர் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.
கன்னி ராசி காரர்களே:
பழைய சிக்கலில் ஒன்று தீரும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக் கசப்புகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும்.சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். தாய்மாமன் வழியில் சுபச் செலவு ஏற்படும்.பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள்.
துலாராசி உறவுகளே:
குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம்.பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உங்களைச் சுற்றிஉள்ளவர்களில் உண்மையானவர்கள் யார் என்பதை அறிந்துகொள்வீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். வாழ்க்கைத்துணையின் முயற்சிக்கு ஒத்துழைப்பு தருவீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:
எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உறவினர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களால் ஆதாயம் கிடைக் கும்.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே:
உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும்.பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.வேலைபளு சற்று குறையும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
மகர ராசி காரர்களே:
தாய் வழி உறவினரிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வெளி ஊரில் இருந்து நல்ல செய்தி வரும். வாகனத் தில் செல்லும்போது சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும்.
கும்ப ராசி உறவுகளே:
கடன் பிரச்சினைகள் சற்று குறையும்.உறவினர்கள் வருகை மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்க வேண்டாம். யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.முன் கோபத்தால் பகை உண்டாகும்
மீன ராசி நேயர்களே:
மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். வாழ்க்கைத்துணை யால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு.பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள்.