இன்றைய ராசி பலன் 13.05..2019
புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.13-05-2019, சித்திரை 30, திங்கட்கிழமை, நவமி திதி பகல் 03.21 வரை பின்பு வளர்பிறை தசமி. மகம் நட்சத்திரம் பகல் 10.27 வரை பின்பு பூரம். மரணயோகம் பகல் 10.27 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷராசி நேயர்களே:திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள் பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
ரிஷபராசி அன்பர்களே:வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். காலையில் சற்று சோர்வாக இருக்கும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படும்.தாய்வழிஉறவினர்களால் அலைச்சல்ஏற்படும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.
மிதுனராசி காரர்களே:புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வழக்கு ரீதியாக வெற்றி கிட்டும்.கணவன் – மனைவிக் கிடையே ஏற்பட்ட சிறுசிறு பிணக்குகள் மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது.
புது வாகனம்வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.
கடகராசி நேயர்களே:
சிம்மராசி அன்பர்களே:தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். திடீர் செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள் புது ஏஜென்சிஎடுப்பீர்கள்.ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும்
கன்னி ராசி காரர்களே::ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள்.புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். பெற்றோருடன் இருந்த மனஸ்தாபம் மறையும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.
துலாராசி உறவுகளே:நேரத்துக்குச் சாப்பிட முடியாதபடி அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். கணவன்-மனை விக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும்.வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.
விருச்சிகராசி நேயர்களே:நெருங்கியவர்களுக்காக மற்ற வர்களின் உதவியை நாடுவீர்கள். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும்.உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்.
தனுசுராசி அன்பர்களே:பிள்ளைகளால் மனசங்கடங்கள் ஏற்படலாம். வேலையில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.
மகரராசி காரர்களே:சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதிலும் சற்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்.வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
கும்பராசி உறவுகளே:தாய்வழிஉறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் ராஜதந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள்.சுப செய்திகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
மீனராசி நேயர்களே:பிள்ளைகள் மூலம் சுப செய்தி கிட்டும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம்பொங்கும். உங்களுடைய ஆலோசனை களை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.