இன்றைய ராசி பலன் – 13.09.2020
இன்றைய பஞ்சாங்கம், 13-09-2020, ஆவணி 28, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 03.17 வரை பின்பு தேய்பிறை துவாதசி. புனர்பூசம் நட்சத்திரம் மாலை 04.33 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
மேஷ ராசி நேயர்களே:
பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து, உற்சாகம் பெருக்கெடுக்கும்.டு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். எதிர்காலத்துக்குப் பயன் தரும் வகையில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:
சுப நிகழ்ச்சிகளிலும் விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். இரண்டாம் முயற்சியில்சில காரியங்கள் முடிவடையும். புதிய முயற்சிகளைத் தவிர்த்து விடுவது நல்லது.
மிதுன ராசி காரர்களே:
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.திருமண சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரித்தாலும், பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.
கடக ராசி நேயர்களே:
வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.வியாபாரத்தில் வாடிக்கையா ளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:
ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும்.. நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் உங்களுடைய ஆலோசனையை ஏற்றுக்கொண்டு அதன்படி நடப்பார்கள்.பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும்.
கன்னி ராசி காரர்களே:
சுபசெய்திகள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் மூலம் கிடைக்கும் செய்தி அளவற்ற மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும். டம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்களால் வீண்செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும்.
துலாராசி உறவுகளே:
உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.லர் உங்கள் உதவியை நாடுவார்கள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
விருச்சிக ராசி நேயர்களே:
சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும்.வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும்.புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள்.பிள்ளை களை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிப்பதன் காரணமாக உடல் அசதி ஏற்படும்.வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமு கமாவார்கள்.
தனுசு ராசி அன்பர்களே:
10.36 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும்.நண்பர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றத்தால் மன உளைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்.
மகர ராசி காரர்களே:
தொழில் விஷயமாக வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும். சிலருக்கு தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும்.உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். சுபகாரிய முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கும். சிலருக்கு தந்தை யிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.
கும்ப ராசி உறவுகளே:
சிலருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும்.பிள்ளைகளால் சில பிரச் னைகள் ஏற்படக்கூடும்.புதிய முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும்.அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றத்தால் மன உளைச்சல் உண்டாகும்.புது நட்பு மலரும். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது அவசியம்.
மீன ராசி நேயர்களே:
அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது பொருள் வந்து சேரும். கடன்களில் ஒரு பகுதியைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும்.பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.நண்பர்களின் சந்திப்பு நன்மையை தரும்.