இன்றைய ராசி பலன் 14.05..2019
புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.14-05-2019, சித்திரை 31, செவ்வாய்க்கிழமை, தசமி திதி பகல் 12.59 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. பூரம் நட்சத்திரம் காலை 08.53 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் காலை 08.53 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷராசி நேயர்களே: நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.. பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.பூர்வீக சொத்துக்கள் வழியில் நல்ல லாபங்கள் கிடைக்கும்.
ரிஷபராசி அன்பர்களே:மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.எதிர்பாராத வகையில் செலவுகள் அதிகமாகும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் நெருக்கடிகளை தவிர்க்கலாம்.
மிதுனராசி காரர்களே:கொடுத்த கடன் திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை யடைவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். விசேஷங் களை முன்னின்று நடத்துவீர்கள்.வேலை தேடுபவர்க்கு புதிய வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
கடகராசி நேயர்களே:எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.பயணங்கள் சிறப்பாக அமையும்.
சிம்மராசி அன்பர்களே: முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக் கட்டும். உடல் நலம் சீராகும். அழகு, இளமைக் கூடும்.தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும்.
கன்னி ராசி காரர்களே: 1.30 மணிவரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிர்பார்த்தவை தாமதமாகும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள்.உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம்.
துலாராசி உறவுகளே:குடும்பத் தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கக் கூடும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். யாரையும் எடுத்தெறிந்துப் பேச வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். 1.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.
விருச்சிகராசி நேயர்களே:புதிய முயற்சி சாதகமாக முடியும்.சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவர வுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை நிலவும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டா லும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.
தனுசுராசி அன்பர்களே:குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள்.பழைய உறவினர், நண்பர்கள் தேடிவந்துப் பேசுவார்கள். பிள்ளைகளால் மரியாதைக் கூடும். பிரபலங்கள் உதவுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகலாம்.
மகரராசி காரர்களே:பிற்பகல் 1.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தினருடன் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றும்,குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும்.. தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள்.
கும்பராசி உறவுகளே:பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள்.கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.1.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
மீனராசி நேயர்களே:தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும்.