இன்றைய ராசி பலன் – 15.03.2021
இன்றைய பஞ்சாங்கம், 15-03-2021, பங்குனி 02, திங்கட்கிழமை, துதியை திதி மாலை 06.50 வரை பின்பு வளர்பிறை திரிதியை. ரேவதி நட்சத்திரம் பின்இரவு 04.43 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷ ராசி நேயர்களே:
எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும்.குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும்.பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப்பேசி வசூலிக்கப்பாருங்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:
உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும்.மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும்.
மிதுன ராசி காரர்களே:
தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தொலைதூரத்திலிருந்து சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு.
கடக ராசி நேயர்களே:
பழைய சிக்கலில் ஒன்று தீரும்.வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.சிலருக்குக் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும்.உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது.
சிம்ம ராசி அன்பர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும்.உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வார்த்தைகளில் நிதானம் தேவை.உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. தன்னம்பிக்கை குறையும்.
கன்னி ராசி காரர்களே:
உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும்.மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும்.
துலாராசி உறவுகளே:
பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சிலருக்கு தெய்வ வழி பாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:
உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி மன நிம்மதி உண்டாகும். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும்.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே:
வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக் கொள்வார்.பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
மகர ராசி காரர்களே:
பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம் படும். அரசாங்க அதிகாரிகளின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும்.உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள்.
கும்ப ராசி உறவுகளே:வீண் செலவுகளால் சேமிப்பு குறையும்.சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள்.சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற் பட்டு நீங்கும்.
மீன ராசி நேயர்களே:
பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.வாழ்க்கைத்துணை யால் மகிழ்ச்சி உண்டாகும்.சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.தாய்வழி உறவுகளால் மனஸ்தாபம் வந்து நீங்கும். சிலருக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு