இன்றைய ராசி பலன் – 15.04.2021
இன்றைய பஞ்சாங்கம், 15-04-2021, சித்திரை 02, வியாழக்கிழமை, திரிதியை திதி பகல் 03.27 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. கிருத்திகை நட்சத்திரம் இரவு 08.32 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷ ராசி நேயர்களே:நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும்.தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.பாதியில் நின்ற வேலைகள் விரைந்து முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை யின் ஆதரவு கிடைக்கும்.பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம்.
ரிஷப ராசி அன்பர்களே:சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள்.செரிமானப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும்.உடல் அசதி சோர்வு வந்து நீங்கும்.
மிதுன ராசி காரர்களே:சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அனுகூ லம் உண்டாகும்.யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்க வும்.வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.
கடக ராசி நேயர்களே: திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.புதிய நண்பர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.நம்பிக்கைக்குரியவர் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகளுக்கு வாய்ப்பு உள்ளது.அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள்.
சிம்ம ராசி அன்பர்களே:உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.
கன்னி ராசி காரர்களே:வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்கள் வழியில் வீண் செலவுகள் அதிகரிக்கும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.சொத்து சம்பந்தமான வழக்குகளில் இழுபறி நிலை உண்டாகும்.
துலாராசி உறவுகளே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும்.மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
விருச்சிக ராசி நேயர்களே: எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமின்றி கிடைக்கும்.குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.வேற்றுமதத்தவர் உதவுவார்.
தனுசு ராசி அன்பர்களே:பயணங்களால் மகிழ்ச்சி தங்கும்.சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.
மகர ராசி காரர்களே: குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு அமையும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க் கவும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.ஆடம்பர பொருட்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். பொறுமையாக இருப்பது அவசியம்.சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குங்கள்.தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.
கும்ப ராசி உறவுகளே:கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.திருமண சுபமுயற்சிகளில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.வியாபார ரீதியாக நெருக்கடிகள் நிலவும்.
மீன ராசி நேயர்களே:
பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு.குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சிலருக்கு இளைய சகோதரரால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.பால்ய நண்பர்கள் உதவுவார்கள்.உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். உடன்பிறந்தவர்கள் உங்கள் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.