இன்றைய ராசி பலன் – 15.07.2020
இன்றைய பஞ்சாங்கம், 15-07-2020, ஆனி 31, புதன்கிழமை, தசமி திதி இரவு 10.20 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. பரணி நட்சத்திரம் மாலை 04.43 வரை பின்பு கிருத்திகை. சித்த யோகம் மாலை 04.43 வரை பின்பு அமிர்த யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கிருத்திகை (சிலர்). முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
மேஷ ராசி நேயர்களே:
பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். யாருக்கும் பணம் நகை வாங்கி தருவதில் ஈடுபட வேண்டாம்.வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படும்.
ரிஷப ராசி அன்பர்களே:
நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும்.கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை குறையும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். வெளிப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும்.
மிதுன ராசி காரர்களே:
ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார்.புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கடக ராசி நேயர்களே:
நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். காரியங்கள் அனுகூலமாக முடியும்.எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து மன நிம்மதி அடைவீர்கள். உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். குடும்பப் பொறுப்புகளை முடிப்பதில் சற்று அலைச்சல் ஏற்படும்.
சிம்ம ராசி அன்பர்களே:
பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள்.உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாக வேண்டியிருக்கும். பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.
கன்னி ராசி காரர்களே:
சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும்.மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். உத்தியோகத்தில் சக நண்பர்களுடன் வீண் மன ஸ்தாபங்கள் உண்டாகும்.
துலாராசி உறவுகளே:
நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம்.பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும்.விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முயற்சிகள் வெற்றிகரமாக முடியும்.புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே:
குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். . உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். ழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
தனுசு ராசி அன்பர்களே:
சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகலாம் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.பிள்ளைகளுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.அரசால் அனுகூலம் உண்டு. பிள்ளைகளால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
மகர ராசி காரர்களே:
உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். அவசியத் தேவை இருந்தால் மட்டுமே தக்க முன்னேற்பாடுகளுடன் வெளியில் செல்லவும்.எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்.உடனிருப்பவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
கும்ப ராசி உறவுகளே:
தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும்.பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு இளைய சகோதரர்கள் மூலம் பணவிரயத்துக்கு வாய்ப்பு உண்டு.
மீன ராசி நேயர்களே:
பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.