இன்றைய ராசி பலன் – 16.08.2020
இன்றைய பஞ்சாங்கம்,16-08-2020, ஆடி 32, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி பகல் 01.51 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. திருவாதிரை நட்சத்திரம் காலை 07.03 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
மேஷ ராசி நேயர்களே:
மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும்.றவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:
கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித்தருவீர்கள். குடும்ப விஷயமாக முக்கிய முடிவு எடுக்கவேண்டிய சூழ்நிலையில் குடும்பப் பெரியவர் களின் ஆலோசனை அவசியம். மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும்.
மிதுன ராசி காரர்களே:
அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி குறித்து தொலைபேசியில் பேசுவீர்கள். தொழில் ரீதியாக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது.வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும்.
கடக ராசி நேயர்களே:
வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். வீட்டுப் பராமரிப்புப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். திர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:
சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். தந்தையுடனும் தந்தைவழி உறவினர்களுடனும் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களிடம் பேசும்போது பதற்றம் தவிர்க்கவும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும்.
கன்னி ராசி காரர்களே:
பிள்ளைகள் வழியில் சுப செய்தி வரும். நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிற்பகலுக்குமேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.
துலாராசி உறவுகளே:
கணவன்- மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சிலருக்கு அதிகப்படியான செலவுகளால் கடன் வாங்க நேரிடும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை.
விருச்சிக ராசி நேயர்களே:
சந்திராஷ்டமம் இருப்பதால் மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். ஆனால், நண்பர்கள் உங்கள் தேவையை அறிந்து செய்யும் உதவி ஆறுதல் தரும். சுபகாரியங்கள் மற்றும் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
தனுசு ராசி அன்பர்களே:
பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பால் முயற்சி சாதகமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும்.
மகர ராசி காரர்களே:
புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.வேலையில் பணிச்சுமை குறையும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உறவினர்கள் நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும்.வழக்கில் வெற்றிபெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள்.பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும்.
கும்ப ராசி உறவுகளே:
சிலருக்கு குடும்பம் தொடர்பான பணிகளுக்காகச் சற்று வேலைகள் அதிகரிக்கும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும்.அக்கம்- பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். சிலருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள்.வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
மீன ராசி நேயர்களே:
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. கடன்களில் ஒரு பகுதியைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சிக்கல்கள் குறையும்.