இன்றைய ராசி பலன் – 17.03.2021
இன்றைய பஞ்சாங்கம், 17-03-2021, பங்குனி 04, புதன்கிழமை, சதுர்த்தி திதி இரவு 11.29 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. அஸ்வினி நட்சத்திரம் காலை 07.31 வரை பின்பு பரணி. மரணயோகம் காலை 07.31 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
மேஷ ராசி நேயர்களே:
பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.
ரிஷப ராசி அன்பர்களே:
அனாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதே னும் வேலை இருந்தபடியிருக்கும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை உண்டாகும்.மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும்.அரசு காரியங்கள் இழுபறியாகும்.
மிதுன ராசி காரர்களே:
உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். சபைகளில் முதல்மரியாதை கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும்.உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கடக ராசி நேயர்களே:
நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும்.நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவி னரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
சிம்ம ராசி அன்பர்களே:
புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீண் வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும்.மனதில் அவ்வப்போது சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.
கன்னி ராசி காரர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது தாமதமாகும்.உங்கள் திறமையைச் சிலர் குறைத்து மதிப்பிடுவார்கள்.மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும்.உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் தோன்றும்.சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும்.
துலாராசி உறவுகளே:
குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும்.இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும்.நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு.உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.
விருச்சிக ராசி நேயர்களே:
பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சகோதரர்களிடம் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.
தனுசு ராசி அன்பர்களே:
குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் தோன்றி மறையும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
மகர ராசி காரர்களே:
பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன் கிட்டும்.தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்லவும்.உடன்பிறந்தவர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.நவீன சாதனங்கள் வாங்குவீர்கள்.
கும்ப ராசி உறவுகளே:
உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் உண்டாகும். பிள்ளை களின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படுவார்கள்.வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம்.
மீன ராசி நேயர்களே:
உங்கள் திறமையைச் சிலர் குறைத்து மதிப்பிடுவார்கள். அழகும்இளமையும் கூடும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும்.