இன்றைய ராசி பலன் – 17.09.2021
இன்றைய பஞ்சாங்கம்,17-09-2021, புரட்டாசி 01, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி காலை 08.08 வரை பின்பு வளர்பிறை துவாதசி. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 03.36 வரை பின்பு அவிட்டம். மரணயோகம் பின்இரவு 03.36 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
மேஷ ராசி நேயர்களே:நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். தாயின் உடல் நலனில் கவனம் தேவை.அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். தெய்வப் பணிகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியை அளிக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே:சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கும்.வேலையில் உடன் பணிபுரிபவர்களால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் அதனால் மகிழ்ச்சியே ஏற்படும்.வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
மிதுன ராசி காரர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும்.சிலருக்கு எதிர்பாராத பண வரவுடன் திடீர் செலவுகளும் உண்டு.முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிக்கப் பாருங்கள். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகள் குறையும். எந்தக் காரியத்திலும் பொறுமை அவசியம்.
கடக ராசி நேயர்களே:திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.வாகனத்தில் செல்லும்போது சற்று கவனமாக இருக் கவும்.கல்யாண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படும். உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள்.
சிம்ம ராசி அன்பர்களே:ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு உண்டாகும்.கடன்களாலும் எதிரிகளாலும் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். குடும்ப விஷயமாக சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும்.வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி வரும்.குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும்.
கன்னி ராசி காரர்களே: வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள்.கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனுசரித்துச் செல்வது நல்லது.வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.
துலாராசி உறவுகளே: எதிர்பாராத செலவுகள் வந்து நீங்கும்.சகோதர வகையில் மகிழ்ச்சியுடன் ஆதாயமும் உண்டாகும்.தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் அலைச்சல்கள் ஏற்படலாம். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.பழைய பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும்.கண வன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும்.கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். புதிய முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள்.வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும்.
தனுசு ராசி அன்பர்களே:புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். இளைய சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.. உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும்.கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சினைகளை நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரம் வழக்கம் போல நடைபெறும்.
மகர ராசி காரர்களே:மன அழுத்தங்கள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளும் ஏற்படுவதால், கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும்.நீண்ட நாட்களாக வராத கடன்கள் வசூலாகும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும்.மனைவி மூலமாக இன்று நல்லது நடக்கும். தாயின் தேவையை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.
கும்ப ராசி உறவுகளே:பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள்.தொழில் தொடங்கும் முயற்சிகளில் உடனிருப்பவர்களால் இடையூறுகள் ஏற்படலாம். சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்படும்.எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நலனில் கவனம் தேவை.
மீன ராசி நேயர்களே:
பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள்.வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். தாய்வழி உறவினர்கள் வகையில் சுபச்செலவுகள் ஏற்படும்.கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். மற்றவர்களுடன் இணக்கமான அணுகுமுறை அவசியம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.