இன்றைய ராசி பலன் – 19.04.2021
இன்றைய பஞ்சாங்கம், 19-04-2021, சித்திரை 06, திங்கட்கிழமை, சப்தமி திதி இரவு 12.02 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. நாள் முழுவதும் புனர்பூசம் நட்சத்திரம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷ ராசி நேயர்களே:அரசால் ஆதாயம் உண்டு. நண்பர்கள் மூலம் பண உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும்.வீட்டில் சிறுசிறு மராமத்துப் பணிகளை மேற்கொள்ள நேரிடும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும்.அலுவலகப் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும்.
ரிஷப ராசி அன்பர்களே: விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்.உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படலாம்.இளைய சகோதரர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். பணவரவு சுமாராக இருக்கும்.
மிதுன ராசி காரர்களே:உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். வியாபாரத்தில் கடன் தர வேண்டாம். அவ்வப்போது மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.கடன்கள் ஓரளவு குறையும்.தந்தையின் தேவைக்காக செலவு செய்யவேண்டி வரும்.ஆனந்தமான செய்திகள் வந்து சேரும்.
கடக ராசி நேயர்களே:வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும்.வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். தேவையான அளவுக்கு பணம் இருப்பதால் செலவுகளை சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது.பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் உண்டாகும்.
சிம்ம ராசி அன்பர்களே:அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு கரையும்.சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சிலருக்குக் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை யும் ஏற்படும்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடுவது நல்லது.உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
கன்னி ராசி காரர்களே:இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும்.மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது.குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம்.
துலாராசி உறவுகளே:குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.தந்தைவழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.பூர்வீக சொத்துக்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். மன இறுக்கம் நீங்கி நிம்மதி உண்டாகும்.குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும்.தந்தையால் ஆதாயம் கிடைக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவருடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்க வும்.குடும்பத்தில் எல்லாவற்றையும் நீங்களே இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும்.
தனுசு ராசி அன்பர்களே:கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும்.திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் தலையீடு காரணமாகக் குடும்பத் தில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.
மகர ராசி காரர்களே:சுப பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். பிள்ளைகள் உங்கள் விருப்பப் படி நடந்துகொள்வார்கள்.பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.
கும்ப ராசி உறவுகளே:எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.வண்டி வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் தோன்றும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முயற்சிகள் சாதகமா கும்.ண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
மீன ராசி நேயர்களே:
தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும்.தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது. நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும்.பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புது அனுபவம் உண்டாகும்.