இன்றைய ராசி பலன் – 19.10.2021
இன்றைய பஞ்சாங்கம்19-10-2021, ஐப்பசி 02, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு 07.03 வரை பின்பு பௌர்ணமி. உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 12.12 வரை பின்பு ரேவதி. அமிர்தயோகம் பகல் 12.12 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷ ராசி நேயர்களே:பிள்ளைகளிடம் கனிவாக பேசுங்கள். உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.தாய்மாமன் வழியில் எதிர் பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிக ரிக்கும்.வியாபாரத்தில் நல்ல லாபம் ஈட்டுவீர்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சேமிப்பு உயரும். வீட்டில் குடும்பத்தினருடன் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி நிம்மதி பெறுவீர்கள். நம்பிக்கைக்குரிய வரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் வகையில் திடீர் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மிதுன ராசி காரர்களே:உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்.
கடக ராசி நேயர்களே:பழைய பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு காண்பீர்கள்.மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். அவசியம் ஏற்பட்டால் தவிர வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்.வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத செலவு களால் கடன் வாங்கவும் நேரிடும்.நன்றி மறந்த சிலரை நினைத்து வருந்துவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும். மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும்.
கன்னி ராசி காரர்களே:சகோதர வகையில் உதவிகள் உண்டு. வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சந்தோஷம் கூடும். உங்கள் முயற்சிக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.
துலாராசி உறவுகளே:வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும்.நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும்.
விருச்சிக ராசி நேயர்களே:குடும்பத்தினர் உங் கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருப்பதுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.புது தொழில் தொடங்குவீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே:தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.வியாபார ரீதியான பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிட்டும். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.பால்ய நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். சகோதரர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும்.
மகர ராசி காரர்களே:உடன் பிறந்தவர்கள் நன்மை செய்வார்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க் கவும்.தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். பொறுமையாக இருப்பது அவசியம்.
கும்ப ராசி உறவுகளே:அரை குறையாக நின்ற வேலைகள் எல்லாம் இனிதே முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். தாய்வழி உறவி னர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சியும் உற்சாகமும் தருவதாக இருக்கும். குடும்பத்தில் இருந்த டென்ஷன் கோபம் யாவும் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.தாயின் விருப் பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
மீன ராசி நேயர்களே:
பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தரு வார்.உறவினர்கள் நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிப்பதால் சிலருக்கு சிறிய அளவில் கடன் வாங்க நேரிடும்.சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். இளைய சகோ தரரால் சங்கடங்கள் ஏற்படும்.பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.