இன்றைய ராசி பலன் – 19.12.2020
இன்றைய பஞ்சாங்கம், 19-12-2020, மார்கழி 04, சனிக்கிழமை, பஞ்சமி திதி பகல் 02.14 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 07.40 வரை பின்பு சதயம். சித்தயோகம் இரவு 07.40 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
மேஷ ராசி நேயர்களே:
புது முடிவுகள் எடுப்பீர்கள். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக் காது.நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடிவருவார். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.
ரிஷப ராசி அன்பர்களே:
மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பணிச் சுமை குறையும்.எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
மிதுன ராசி காரர்களே:
உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். சுறுசுறுப்பின்மையும் ஏற்படலாம்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். அலைச்சல் டென்ஷன் குறையும்.உடல்நலனில் கவனம் தேவை.எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும்.
கடக ராசி நேயர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும்.தந்தைவழி உறவுகளால் சங்கடம் ஏற்படக்கூடும்.
சிம்ம ராசி அன்பர்களே:
கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.சகோதர வகையில் நன்மை உண்டு. சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
கன்னி ராசி காரர்களே:
அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது.எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களிடம் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.
துலாராசி உறவுகளே:
பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம்.வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே நடைபெறும். சுப பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே:
நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். மாலையில் குடும்பத்தினருடன் உற்சாகமாகப் பேசி மகிழ்வீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும்.வாகனத்தில் கவனம் தேவை.எதிரிகள் பணிந்து போவார்கள்.
தனுசு ராசி அன்பர்களே:
கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும்.உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
மகர ராசி காரர்களே:
தாயின் உடல்நலனில் கவனம் தேவை.நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும்.வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறைவு உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.
கும்ப ராசி உறவுகளே:
பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது மிக அவசியம். சிலர் உங்களை குறை கூறினாலும் அதை பெரிதாக்க வேண்டாம்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீன ராசி நேயர்களே:
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும்.மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். காரியங்களில் வெற்றி உண்டாகும்.பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும்.பிள்ளைகளால் பெருமை உண்டா கும்.புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது.