இன்றைய ராசி பலன் – 20.02.2021
இன்றைய பஞ்சாங்கம், 20-02-2021, மாசி 08, சனிக்கிழமை, அஷ்டமி திதி பகல் 01.32 வரை பின்பு வளர்பிறை நவமி. நாள் முழுவதும் ரோகிணி நட்சத்திரம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
மேஷ ராசி நேயர்களே:
கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தன்னம்பிக்கை குறையும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களாலும், பங்குதாரர்களாலும் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும்.வர வேண்டிய பணம் கைக்கு வரும்.
ரிஷப ராசி அன்பர்களே:
உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்றுக்கான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.குடும்ப தேவைக்கேற்றவாறு வருமானம் பெருகும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும்.வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார்.
மிதுன ராசி காரர்களே:
பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார்.குடும்ப தேவைக்கேற்றவாறு வருமானம் பெருகும். சிலருக்கு வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரக்கூடும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
கடக ராசி நேயர்களே:
பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வாழ்க்கைத்துணையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சிம்ம ராசி அன்பர்களே:
சகோதரர்களால் பயனடைவீர்கள். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக் கவும்.திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.
கன்னி ராசி காரர்களே:
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.வாழ்க்கைத் துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும்.முக்கியமான முடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம்.நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வங்கி சேமிப்பு உயரும்.
துலாராசி உறவுகளே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். உடல்நலனில் கவனம் தேவை.விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
விருச்சிக ராசி நேயர்களே:
உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.காரியங்களில் சிறுசிறு தடைகள் உண்டாகும். எதிர்பாராத சந்திப்பு நிகழும்.
தனுசு ராசி அன்பர்களே:
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும்.பிள்ளைகளால் அலைச்சலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும்.வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள்.
மகர ராசி காரர்களே:
ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும்.குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்படக்கூடும் ,உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
கும்ப ராசி உறவுகளே:
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் நீங்கி சுமுகமான சூழ்நிலை ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும்.தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் செயல்படுவீர்கள்.தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும் காரியங்களில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும்.
மீன ராசி நேயர்களே:
உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பம் தொடர்பான முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம்.எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். மற்றவர்களு டன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.பால்ய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகர மாக இருப்பார்கள்.குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.