இன்றைய ராசி பலன் – 20.04.2021
இன்றைய பஞ்சாங்கம், 20-04-2021, சித்திரை 07, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி இரவு 12.44 வரை பின்பு வளர்பிறை நவமி. புனர்பூசம் நட்சத்திரம் காலை 06.52 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷ ராசி நேயர்களே: தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கலாம்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள்.
ரிஷப ராசி அன்பர்களே: பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும்.உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.
மிதுன ராசி காரர்களே: புதியவர்கள் நண்பர்களாவார்கள். தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள் ளவும்.பிள்ளைகளால் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும்.எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.
கடக ராசி நேயர்களே:தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது.உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள்.
சிம்ம ராசி அன்பர்களே:பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும்.பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சாதுர்யமாகச் சமாளித்துவிடுவீர்கள்.வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும்.
கன்னி ராசி காரர்களே:சுபகாரியம் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள்.குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள்.
துலாராசி உறவுகளே: பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள்.பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.அறிவு பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டா லும் பாதிப்பு எதுவும் இருக்காது. கணவன் மனைவிக்குள் இருந்த மணப்போர் நீங்கும்.உத்தியோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையை பெறுவீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.உங்களை யாரும் கண்டுகொள்வதில்லை உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
மகர ராசி காரர்களே:கல்யாண பேச்சு வார்த்தை வெற்றி அடையும். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். செலவுகளைச் சமாளிக்க கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் சில ருக்கு ஏற்படும்.உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும்.அரசால் அனுகூலம் உண்டு.
கும்ப ராசி உறவுகளே: உடல் நலம் சிறப்பாக இருக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலருக்கு நண்பர்கள் மூலம் பணவரவு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள்.
மீன ராசி நேயர்களே:
நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும்.பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.உடல் நலம் சிறப்பாக இருக்கும்.வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும்.