இன்றைய ராசி பலன் 20.05..2019
புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.20-05-2019, வைகாசி 06, திங்கட்கிழமை, துதியை திதி பின்இரவு 01.21 வரை பின்பு தேய்பிறை திரிதியை. கேட்டை நட்சத்திரம் பின்இரவு 02.29 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷராசி நேயர்களே: சந்திராஷ்டமம் நீடிப்பதால் குடும்பத்தில் சிறிசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் பொறுமை காப்பது அவசியம். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். பிள்ளைகள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால், உடலும் மனமும் சோர்வடையும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளை கவனமாக இருப்பது நல்லது.
ரிஷபராசி அன்பர்களே:.விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் சிலர் உங்கள் யோசனையைக் கேட்டு வருவார்கள்.வேற்றுமதத்தவர் உதவுவார். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
மிதுனராசி காரர்களே:எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள்.தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.போட்டி பொறாமைகள் குறையும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள்.விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கும்.உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.
கடகராசி நேயர்களே:பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அரவணைத்துச் செல்லவும்.தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளதால், வெளியிடங்களில் உண்பதைத் தவிர்க்கவும்.பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். புதிய முயற்சியை காலையில் தொடங்குவது நல்லது. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும்.
சிம்மராசி அன்பர்களே:தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படக் கூடும்.உறவினர்களுடன் பேசும்போது பதற்றம் கொள்ளாமல் இருப்பது அவசியம். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் மிகவும் கவனமாக இருக்கவும்.மனதிற்கு இதமான செய்தி வரும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்
கன்னி ராசி காரர்களே:இளைய சகோதர வகையில் அனுகூ லம் உண்டாகும்.பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்.நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும்.
துலாராசி உறவுகளே:புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பெரியவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும்.அலுவலகத்தில் சக பணியாளரின் பணியையும் நீங்கள் பார்க்கவேண்டி வரும்.
விருச்சிகராசி நேயர்களே: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும்.
தனுசுராசி அன்பர்களே:குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார்.திடீர் பயணங்கள் இருக்கும். மாலையில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள்.சகோதர பகைவரக்கூடும். அலுவலகத்தில் பணிகளை உடனுக்குடன் செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உணவில் காரம்,வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது.
மகரராசி காரர்களே:தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். உதவிகேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
கும்பராசி உறவுகளே:பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். இழுபறியாக இருந்து வந்த அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.மேலதிகாரிகளால் அனுகூலங்கள் உண்டாகும். தந்தைவழியில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். வீண் செலவுகளை தவிர்ப்பதன் மூலம் சேமிப்பு உயரும்.
மீனராசி நேயர்களே:அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கவேண்டாம். கை மாற்றாக வாங்கி யிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பிள்ளைகளால் அலைச்சலும் டென்ஷனும் அதிகரிக்கலாம். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.