இன்றைய ராசி பலன் – 20-09-2020
இன்றைய பஞ்சாங்கம், 20-09-2020, புரட்டாசி 04, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.27 வரை பின்பு பஞ்சமி. சுவாதி நட்சத்திரம் இரவு 10.51 வரை பின்பு விசாகம். சித்தயோகம் இரவு 10.51 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. லக்ஷ்மி நரசிம்மர்- விநாயகர் வழிபாடு நல்லது.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
மேஷ ராசி நேயர்களே:
கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
ரிஷப ராசி அன்பர்களே:
வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். எதிரிகள் பணிந்து வருவார்கள்.நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பிறருக்குக் கொடுத்து வராமல் இருந்த கடன் தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
மிதுன ராசி காரர்களே:
திருமண முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலமான பலன்கள் கிட்டும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் குடும்பசூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
கடக ராசி நேயர்களே:
தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும்.வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
சிம்ம ராசி அன்பர்களே:
சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பேச்சில் முதிர்ச்சி தெரியும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வாடிக்கையாளர்கள் மிகவும் அனுசரணையாக இருப்பார்கள்.உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள்.பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கன்னி ராசி காரர்களே:
எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகளை சந்திக்க நேரிடும். கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
துலாராசி உறவுகளே:
புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும்.சொத்து பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். பணிச்சுமை அதிகரித்தாலும் சோர்ந்துவிடாமல் செய்து முடிப்பீர்கள்.உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே:
.எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகள் வழியில் தேவையற்ற சில பிரச்னைகள் ஏற்பட்டு சங்கடம் தரக்கூடும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும்.பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். விற்பனை எப்போதும்போலவே நடைபெறும்.குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது.
தனுசு ராசி அன்பர்களே:
அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்காதீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதர சகோதரிகளுடன் இருந்த மன சங்கடங்கள் விலகி ஒற்றுமை கூடும். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள்.
மகர ராசி காரர்களே:
பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். பொறுமையாக இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அனுசரித்துச் செல்வது நல்லது.பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
கும்ப ராசி உறவுகளே:
உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். வாழ்க்கைத்துணை உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். பிற்பகலுக்கு மேல் சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.
மீன ராசி நேயர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும்.அன்றாடப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை.வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கி கொள்ளாதீர்கள். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும்,வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை வேண்டும். கணவன் – மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும்