இன்றைய ராசி பலன் – 20.10.2020
இன்றைய பஞ்சாங்கம், 20-10-2020, ஐப்பசி 04, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி பகல் 11.19 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. கேட்டை நட்சத்திரம் பின்இரவு 02.12 வரை பின்பு மூலம். மரண யோகம் பின்இரவு 02.12 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷ ராசி நேயர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவ சியம். உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கப் பாருங்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். மற்றவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம்.
ரிஷப ராசி அன்பர்களே: சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும்.குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனை அவசியம்.பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தாயாரின் உடல்நிலை சீராகும்.உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும்.
மிதுன ராசி காரர்களே:பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். எதிர்ப்புகளும் இடையூறுகளும் நீங்கும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வெளிவட்டாரங்கள் மற்றும் வெளியூரிலிருந்து நல்லசெய்தி வரும்.பிள்ளைகள் ஆலோசனை கேட்டு வருவார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். பிற்பகலுக்கு மேல் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள்.
கடக ராசி நேயர்களே:உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். தாய்வழி உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.திருமண பேச்சுவார்த்தைகளில் இழுபறி நிலை உண்டாகும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும்.அக்கம் – பக்கம் வீட்டாரின் அன்பு தொல்லை குறையும். சிலருக்கு அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படக்கூடும். பேசும் போது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
சிம்ம ராசி அன்பர்களே:மகளுக்கு நல்ல வரன் அமையும்.முக்கியப் பிரமுகர் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.பண பற்றாக்குறையினால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும் வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.
கன்னி ராசி காரர்களே:விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக் கசப்புகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தாய்மாமன் வழியில் சுபச்செலவு ஏற்படும். உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். புது வேலை அமையும்.
துலாராசி உறவுகளே: தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும்.குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பொது விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். நண்பர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது அவசியம்.சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே:. உத்தியோகத்தில் சக ஊழியர்களை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பெற்றோர்கள் இணக்கமாக இருப்பார்கள். கணவன்- மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுங்கள். மன உறுதியுடன் செயல்படுவீர்கள்.சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
தனுசு ராசி அன்பர்களே:பிள்ளை களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது.திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். தந்தைவழி உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் சற்று எச்சரிக்கையாக நடந்துகொள்வது அவசியம்.விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் ஓரளவு குறையும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.
மகர ராசி காரர்களே:தொழில் ரீதியாக புதிய நட்பு உண்டாகும். பிள்ளைகள் கேட்பதை வாங்கித் தந்து அவர்களை உற்சாகப்படுத்துவீர்கள். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உங்கள் முயற்சிக்கு பெற் றோரின் ஆதரவு கிடைக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். தந்தையுடன் பேசும்போது பொறுமை அவசியம்.வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள்.
கும்ப ராசி உறவுகளே:. உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எதுவும் இன்று எடுக்க வேண்டாம்.குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும்.குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும்.
மீன ராசி நேயர்களே:
புன்னிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு.பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். சிலருக்கு திடீர் செலவுகளுக்கு வாய்ப்பு உள்ளது. சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் அனுசரணை யாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள்.