இன்றைய ராசி பலன் – 20.10.2021
இன்றைய பஞ்சாங்கம் 20-10-2021, ஐப்பசி 03, புதன்கிழமை, பௌர்ணமி திதி இரவு 08.26 வரை பின்பு தேய்பிறை பிரதமை. ரேவதி நட்சத்திரம் பகல் 02.00 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி. அன்னா பிஷேகம். சிவ வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
மேஷ ராசி நேயர்களே: அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடைவீர்கள். உற்சாகமும் பெருக்கெடுக்கும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சியில் நல்ல செய்தி கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.சிலருக்கு பணவரவு இருந்தாலும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். குடும்ப விஷயமாக முக்கிய முடிவு எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சகோதரர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.
மிதுன ராசி காரர்களே:மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வாழ்க்கைத்துணை கேட்பதை வாங்கித் தந்து மகிழ்விப்பீர்கள்.உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும்.உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். சிலருக்கு வீண் அலைச்சலுடன் உடல் அசதியும் ஏற்படக்கூடும்.
கடக ராசி நேயர்களே:வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும்.வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும், நண்பர்கள் உங்கள் தேவையை அறிந்து செய்யும் உதவி ஆறுதல் தரும்.குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும்.
சிம்ம ராசி அன்பர்களே:ராசிக்கு பகல் 02.00 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு குடும்பம் தொடர்பான பணிகளுக்காக சற்று அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சில ருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும்.கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.
கன்னி ராசி காரர்களே:ராசிக்கு பகல் 02.00 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். வெளியிடங்களில் பேசும் போது நிதானத்துடன் இருப்பது நல்லது.உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும்.
துலாராசி உறவுகளே:கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை.பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும்.வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
தனுசு ராசி அன்பர்களே:மகளுக்கு நல்ல வரன் அமையும். சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு உண்டாகும். வீட்டுப் பராமரிப்புப் பணி களில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள்.எதிர்பாராத சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும்.எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.
மகர ராசி காரர்களே:விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்யவேண்டாம்.குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிரி கள் வகையில் எச்சரிக்கை தேவை.பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.
கும்ப ராசி உறவுகளே:தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும்.வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார்.கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். அவர் மூலம் உங்களுக்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். தந்தை யுடனும் தந்தைவழி உறவினர்களுடனும் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி வருமானம் பெருகும்.
மீன ராசி நேயர்களே:
உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.நெருங்கியவரிடம் உங்கள் மனக் குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும்.உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகலாம். வியாபாரத்தில் பணியாளர் களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து செல்லும்.