இன்றைய ராசி பலன் – 21-09-2020
இன்றைய பஞ்சாங்கம், 21-09-2020, புரட்டாசி 05, திங்கட்கிழமை, பஞ்சமி திதி இரவு 11.42 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. விசாகம் நட்சத்திரம் இரவு 08.48 வரை பின்பு அனுஷம். மரணயோகம் இரவு 08.48 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷ ராசி நேயர்களே:
கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும்.உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். ராசிக்கு பகல் 03.16 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம்.
ரிஷப ராசி அன்பர்களே:
பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.குடும்பத்தில் விட்டு கொடுத்து செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
மிதுன ராசி காரர்களே:
எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும்.குடும்ப தேவைகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். பிள்ளைகளின் பிடிவாதம் சற்று கோபத்தை ஏற்படுத்தினாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.
கடக ராசி நேயர்களே:
நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.எந்த செயலையும் சிந்தித்து செயல்பட்டால் முன்னேற்றம் ஏற்படும். தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:
பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். சகோதர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.உடலில் சிறு உபாதைகள் ஏற்படும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.செய்யும் செயல்களில் ஆர்வமின்றி இருப்பீர்கள்.
கன்னி ராசி காரர்களே:
புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும்.நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். எதிர்பாராத வேலைச்சுமையின் காரணமாக சற்று சோர்வு உண்டாகும். சகோதர சகோதரி வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
துலாராசி உறவுகளே:
உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும்.தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பக்குவமாகச் சமாளித்து விடுவீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:
குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உறவினர் வருகையால் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.
தனுசு ராசி அன்பர்களே:
குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும்.பண வரவுகள் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர்பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
மகர ராசி காரர்களே:
வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சல் ஏற்படக்கூடும்.செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை தீரும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.உறவினர்களால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும்.
கும்ப ராசி உறவுகளே:
உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒரு சில அனுகூலப் பலன்கள் உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாகும்.திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். மற்றவர்களுடன் பேசும்போது பதற்றம் வேண்டாம்.மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டா லும் பாதிப்பு இருக்காது.
மீன ராசி நேயர்களே:
ராசிக்கு பகல் 03.16 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும்.குடும்பத்தில் தேவையற்ற மருத்துவ செலவுகள் உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டிவரும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.