இன்றைய ராசி பலன் – 21.10.2021
இன்றைய பஞ்சாங்கம்,21-10-2021, ஐப்பசி 04, வியாழக்கிழமை, பிரதமை திதி இரவு 10.16 வரை பின்பு தேய்பிறை துதியை. அஸ்வினி நட்சத்திரம் மாலை 04.17 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் மாலை 04.17 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷ ராசி நேயர்களே:அதிக வேலைச் சுமையால் கோபப்படுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பணவரவு பலவழிகளில் வரும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.
ரிஷப ராசி அன்பர்களே:எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும்.தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.உறவினர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். முயற்சிகள் சாதகமாக முடியும்.சில வேலைகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும்.வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.
மிதுன ராசி காரர்களே:திருமண சுபமுயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும்.வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். தேவை யான அளவுக்குப் பணம் இருப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள்.உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.
கடக ராசி நேயர்களே:தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும்.திருமண சுப முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள்.அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:பழைய சிக்கலில் ஒன்று தீரும். புதிய முயற்சி களைத் தவிர்ப்பது நல்லது.விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சிலருக்கு மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.தந்தையின் உடல்நலனில் கவ னம் தேவை.
கன்னி ராசி காரர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும்.மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். எதிரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். உங்களுக்கு தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும்.
துலாராசி உறவுகளே:பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை.பொருளாதார ரீதியான பிரச்சினைகள் குறையும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். உற்சாகமாக எதையும் செய்யத் தொடங்குவீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார்.பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு வருத்தம் தரும்.
தனுசு ராசி அன்பர்களே:அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். தந்தைவழி உறவினர் களால் வீண் செலவுகள் ஏற்படும்.
மகர ராசி காரர்களே:தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும்.குடும்பத்தில் பெரியவர்களுடன் மன ஸ்தாபங்கள் உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.வீடு , வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். இளைய சகோதரர் களுக்காக செலவு செய்ய நேரிடும்.
கும்ப ராசி உறவுகளே:தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும்.உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும்.நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
மீன ராசி நேயர்களே:
தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.மற்றவர்களு டன் வீண் சர்ச்சைகளில் ஈடுபடவேண்டாம்.வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் சற்று சோர்வு உண்டாகும்.தொழில் வியாபார ரீதியாக மனஉளைச்சல் அதிகமாகும்.