இன்றைய ராசி பலன் – 21.12.2020
இன்றைய பஞ்சாங்கம், 21-12-2020, மார்கழி 06, திங்கட்கிழமை, சப்தமி திதி மாலை 04.15 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 11.03 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் இரவு 11.03 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷ ராசி நேயர்களே:
ள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:
வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள்.சிலருக்கு பணவரவு இருந்தாலும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.குடும்ப விஷயமாக முக்கிய முடிவு எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும்.
மிதுன ராசி காரர்களே:
வாழ்க்கைத்துணை கேட்பதை வாங்கித் தந்து மகிழ்விப்பீர்கள். சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும்.உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும். பிரபலங்களின் நட்பு கிட்டும். சிலருக்கு வீண் அலைச்சலுடன் உடல் அசதியும் ஏற்படக்கூடும்.கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.
கடக ராசி நேயர்களே:
ராசிக்கு மாலை 04.30 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும்.வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். தாய்மாமன் வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:
ராசிக்கு மாலை 04.30 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தந்தையுடனும் தந்தைவழி உறவினர்களுடனும் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வாலான காரியங்களை எல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்காதீர்கள்.வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.பயணங்களில் கவனம் தேவை. வீண் அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும்.
கன்னி ராசி காரர்களே:
நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். நீண்ட நாள்களாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.மனைவி வழியில் ஆதரவு பெருகும்.பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும்.சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
துலாராசி உறவுகளே:
சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.வியாபாரத்தில் பழையவேலையாட்களை மாற்றுவீர்கள். தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:
மறைமுக எதிர்ப்புகள் விலகும்.குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் கவனம் தேவை. தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
தனுசு ராசி அன்பர்களே:
பணி களில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள்.நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும்.பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். இளைய சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடுகளைக்கட்டும். தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.
மகர ராசி காரர்களே:
சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கை மாத்தாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
கும்ப ராசி உறவுகளே:
திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை ஏற்படும். சிலருக்குக் குடும்பம் தொடர்பான பணிகளுக்காகச் சற்று அலைச்சல் ஏற்படும்.குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். சில ருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றி கொள்ளப் பாருங்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.
மீன ராசி நேயர்களே:
பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்.திடீர் பயணங்களால் அலைச்சல்கள் இருக்கும், வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் சில சிரமங்கள் ஏற்படும்.நண்பர்களால் பிரச்சினைகள் வரக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.