இன்றைய ராசி பலன் 22.05..2019
புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.22-05-2019, வைகாசி 08, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.41 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. பூராடம் நட்சத்திரம் பின்இரவு 05.13 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
மேஷராசி நேயர்களே:.குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.
ரிஷபராசி அன்பர்களே:சந்திராஷ்டமம் நீடிப்பதால் தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். அனுசரித்துச் செல்வது நல்லது. முக்கிய முடிவுகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள்.சுபகாரியங்களை தவிர்க்கவும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும்.
மிதுனராசி காரர்களே:கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும்.சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு ஏற்பட்டாலும் அதற்கேற்ப சலுகையும் கிடைக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கடகராசி நேயர்களே:வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை மறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள்.
சிம்மராசி அன்பர்களே:வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத்தொடங்குவீர்கள். அலுவலகத்தில் பணி நெருக்கடி குறையும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.
கன்னி ராசி காரர்களே:தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். சிலருக்கு உடல் ஆரோக்கியம் சிறிய அளவில் பாதிக்கப்பட்டு, உரிய சிகிச்சையின் மூலம் உடனே நிவாரணம் கிடைத்துவிடும்.செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும்.வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்.பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.
துலாராசி உறவுகளே:வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலப்பலன் கிட்டும்.
விருச்சிகராசி நேயர்களே:உடலில் வலிகள் வந்து நீங்கும்.கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படலாம்.அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவும். விலகிநின்றவர்கள் விரும்பி வருவார்கள். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் மதிப்பார்கள்.
தனுசுராசி அன்பர்களே: கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்,பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றியாரிடமும் விவாதிக்க வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.
மகரராசி காரர்களே:பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால், திடீர் செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும்.உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை குறையும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.
கும்பராசி உறவுகளே:புது வேலைக்கிடைக்கும். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் இரட்டிப்பாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுக்க உகந்த நாள்.
மீனராசி நேயர்களே: நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.உங்களுக்கு சுப செலவுகள் ஏற்படும்.நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். உறவினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.