இன்றைய ராசி பலன் 22.06.2020
இன்றைய பஞ்சாங்கம், 22-06-2020, ஆனி 08, திங்கட்கிழமை, பிரதமை திதி பகல் 11.59 வரை பின்பு வளர்பிறை துதியை. திருவாதிரை நட்சத்திரம் பகல் 01.31 வரை பின்பு புனர்பூசம். சித்த யோகம் பகல் 01.31 வரை பின்பு அமிர்த யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷ ராசி நேயர்களே:
பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும்.அரசால் ஆதாயம் உண்டு, எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள்.சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:
பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகோதரர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும்.திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மிதுன ராசி காரர்களே:
இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். சிலருக்கு வீண் அலைச்சல் ஏற்படவும் அதனால் உடல் அசதி உண்டாகவும் கூடும்.பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும். வெளியில் செல்லும்போது தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
கடக ராசி நேயர்களே:
உடல் நலத்தில் கவனம் தேவை. வீட்டுப் பராமரிப்புப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள்.உத்தியோகத்தில் மறை முக தொந்தரவுகள் வந்து நீங்கும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும்,பிள்ளைகளால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும்.
சிம்ம ராசி அன்பர்களே:
உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களிடம் பேசும்போது பதற்றம் தவிர்க்கவும். கடினமான காரியத்தை எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும்.பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
கன்னி ராசி காரர்களே:
உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள்களாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும்.வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.
துலாராசி உறவுகளே:
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை.கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படவும், மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
விருச்சிக ராசி நேயர்களே:
சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் சில சிரமங்கள் ஏற்படும். சுபகாரியங்களை தவிர்க்கவும்.மனதில் சற்று குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து போங்கள். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும்.
தனுசு ராசி அன்பர்களே:
கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.மறைமுக எதிர்ப்புகள் விலகும். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.அழகும் இளமையும் கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.
மகர ராசி காரர்களே:
சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
கும்ப ராசி உறவுகளே:
குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பிள்ளைகளால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாக கூடும்.
மீன ராசி நேயர்களே:
குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சொத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் இழபறி நிலை உண்டாகும்.சிலருக்கு அதிகப்படியான செலவுகளால் கடன் வாங்க நேரிடும். அண்டை அயலாரின் அன்புத் தொல்லை குறையும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.