இன்றைய ராசி பலன் – 22.10.2020
இன்றைய பஞ்சாங்கம், 22-10-2020, ஐப்பசி 06, வியாழக்கிழமை, சஷ்டி திதி காலை 07.40 வரை பின்பு வளர்பிறை சப்தமி. பூராடம் நட்சத்திரம் பின்இரவு 12.58 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷ ராசி நேயர்களே: ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். சிலருக்கு திடீர் பணவரவு மகிழ்ச்சி தரும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சகோதரர்கள் வகையில் சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மற்றவர்களுக்கு உதவி செய்ய போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என் பதால், வார்த்தைகளில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை கடிந்து கொள்ளாதீர்கள். சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுன ராசி காரர்களே:நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் மூலம் முக்கிய பிரச்னை ஒன்று நல்லபடி முடிவுக்கு வரும்.எதிர்பாராத சந்திப்பு நிகழும். சகோதரர்கள் உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார்கள்.விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
கடக ராசி நேயர்களே:பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் காரியங்களில் வெற்றியும் உண்டாகும்.குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது நல்லது.வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த பிரச்சினைகள் விலகும். வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும்.மற்றவர்கள் மீது கோபப்படும் நிலை உருவாகும்.
சிம்ம ராசி அன்பர்களே:பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு.ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்கள் சிரமம் அறிந்து உங்கள் பொறுப்புகளை மற்றவர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.
கன்னி ராசி காரர்களே:மனதில் அவ்வப்போது குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.குடும்பத்தில் பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். சிலருக்கு தாய்வழி உறவினர்களால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படக்கூடும்.பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள்.
துலாராசி உறவுகளே:தந்தைவழி உறவினர்களுக்காகச் செலவு செய்யவேண்டி வரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். பூர்வீக சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். துணிச்சலாக முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும்.திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
விருச்சிக ராசி நேயர்களே:சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நற்பலன் கிட்டும்.தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற் பட்டு நீங்கும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். குடும்பப் பெரியவர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிப் பது அவசியம். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.
தனுசு ராசி அன்பர்களே:கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அதிகாரிகள் தவறுகளை சுட்டிக்காட்டினால் மாற்றி கொள்வது நல்லது. உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக்கொள்வார். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும்.
மகர ராசி காரர்களே:அருகில் உள்ளவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவைப்படும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரும். சிலருக்கு அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் வீண் அலைச்சலுடன், சில சங்கடங்களும் ஏற்படக்கூடும். சொத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் இழுபறி நிலை உண்டாகும்.
கும்ப ராசி உறவுகளே:பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயன் அடைவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார்.
மீன ராசி நேயர்களே:
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சலும் சோர்வும் உண்டாகும். நம்பிக்கைக்குரியவரை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். சிலருக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கும்.. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள்.