இன்றைய ராசி பலன் – 22.10.2021
இன்றைய பஞ்சாங்கம்,22-10-2021, ஐப்பசி 05, வெள்ளிக்கிழமை, துதியை இரவு 12.30 வரை பின்பு தேய்பிறை திரிதியை. பரணி நட்சத்திரம் மாலை 06.55 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
மேஷ ராசி நேயர்களே:தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும்.காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும்.வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.சிலருக்கு எதிர்பாராத செலவுகளின் காரணமாக கையிருப்பு குறைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும்.
ரிஷப ராசி அன்பர்களே:யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் ஓரளவு குறையும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். மாலையில் நண்பர்கள் மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.பிள்ளைகள் மூலம் வீண் மனசங்கடங்கள் உண்டாகும்.
மிதுன ராசி காரர்களே:வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு.குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். மாலையில் உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
கடக ராசி நேயர்களே:விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சிலருக்கு வீட்டில் தெய்வ வழிபாடுகளை நிகழ்த்தும் வாய்ப்பு ஏற்படும்.உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு ஆனந்தத்தை தரும். பிற்பகலுக்குமேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக் கக்கூடும்.உறவினர் நண்பர்களால் அனுகூலம் உண்டு. உணவு விஷயத் தில் கவனம் தேவை. வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.
சிம்ம ராசி அன்பர்களே:தொலைதூரத்திலிருந்து நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று வந்து சேரும்.கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். கண வன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மனதிற்கு நிம்மதியை தரும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற் படும்.
கன்னி ராசி காரர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி இருக்கும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும்.உங்கள் உழைப்பிற்கான பலன் கிடைப்பதில் இடையூறு ஏற்படும். தாயின் தேவைகளை நிறை வேற்றி மகிழ்வீர்கள்.புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. பிற்பகலுக்கு மேல் வீண்செலவுகள் மனச்சஞ்சலத்தை ஏற்படுத்தும்.
துலாராசி உறவுகளே:கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும்.எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் எதிர் பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.எதிர்பாராத வகையில் திடீர் தனவரவு உண்டாகும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர் கள்.வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
விருச்சிக ராசி நேயர்களே:உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். கணவன் – மனைவிக் கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இன்று பிள்ளைகள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு.
தனுசு ராசி அன்பர்களே:நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவுகளு டன் மனஸ்தாபமும் வரக்கூடும்.வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.மகளுக்கு நல்ல வரன் அமையும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மகர ராசி காரர்களே:தந்தை வழி உறவினர்களால் காரிய அனுகூலம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. இளைய சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவைப்படும்.வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கும்ப ராசி உறவுகளே:அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். குடும்பத்தில் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். எதிரிகளால் பிரச்னை ஏற்படும் என்பதால், கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த பிரச்சினைகள் விலகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நீங்கள் கொடுத்த கடன் தொகை திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
மீன ராசி நேயர்களே:
வராது என்றி ருந்த பணம் கைக்கு வரும்.தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் சிறு தாமதத்திற்கு பின் கிட்டும். உறவினர்கள் வகையில் வீண்மனஸ்தாபம் ஏற்படும்.கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புதிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற் பட்டு நீங்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும்.