இன்றைய ராசி பலன் 23.05..2019
புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.23-05-2019, வைகாசி 09, வியாழக்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 04.18 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. நாள் முழுவதும் உத்திராடம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷராசி நேயர்களே:நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.தந்தையின் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும்.தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம்.திருமண பேச்சுவார்த்தைகள் நற்பலனை தரும்.
ரிஷபராசி அன்பர்களே: பிற்பகல் 1.30 மணிவரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உங்களின்அணுகுமுறையை மாற்றுங்கள். க்கம்பக்கத்திலிருப்பவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். பொருளாதார நிலை சற்று மந்தமாக இருந்தாலும் பெரிய கெடுதி இருக்காது.
மிதுனராசி காரர்களே:பிற்பகல் 1.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால்எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். திடீர் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். தாயின் உடல்நலனில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.முக்கிய முடிவு எடுப்பதற்கு முன்பு வாழ்க்கைத்துணையுடன் ஆலோசனை செய்வது நல்லது.வெளி இடங்களில் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது.
கடகராசி நேயர்களே: பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உங்களை எதிர்த்துப் பேசியவர்கள் பணிந்து வருவார்கள். சகோதரரிடம் கேட்ட உதவி கிடைக்கும்.திருமண சுபமுயற்சிகள் அனுகூலமான பலன்களை தரும். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவு உற்சாகம் தரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.
சிம்மராசி அன்பர்களே:தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும்.உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வெளியிடங்களில் சாப்பிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.குடும்பத்தில் உள்ளவர்களால் மனமகிழ்ச்சி கூடும்.வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். சிலருக்கு பிள்ளைகள் வகையில் சங்கடம் ஏற்படக்கூடும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
கன்னி ராசி காரர்களே: தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலநேரங்களில் மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.
துலாராசி உறவுகளே:தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
விருச்சிகராசி நேயர்களே:சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.கோபம் குறையும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால், குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செய்யவும்.வியாபாரத்தில் மந்த நிலை நீங்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.
தனுசுராசி அன்பர்களே: பிற்பகல் 1.30 மணிவரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சற்று சோர்வு ஏற்படும். எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். நீண்ட நாள்களாகச் சந்திக்காமலிருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
மகரராசி காரர்களே: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் நெருக்கடிகளால் வேலைபளு சற்று அதிகரிக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும்.
கும்பராசி உறவுகளே: மனதிற்கு இதமான செய்தி கள் வரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய பதவிகள் தேடி வரும். வி.ஐ.பிகள்வாடிக்கையாளர்களாவார்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.
மீனராசி நேயர்களே:எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.உத்தியோக ரீதியான பயணங்களால் வீண் அலைச்சல் டென்ஷன் ஏற்படும். கூடுமானவரை வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்த்துவிடவும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.