இன்றைய ராசி பலன் 23.06.2020
இன்றைய பஞ்சாங்கம், 23-06-2020, ஆனி 09, செவ்வாய்க்கிழமை, துதியை திதி பகல் 11.19 வரை பின்பு வளர்பிறை திரிதியை. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 01.32 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்த யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. அமிர்த லட்சுமி விரதம்.இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷ ராசி நேயர்களே:
முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும்.பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தொழில் வளர்ச்சிக்கான செயல்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:
ஒரு சிலர் உங்கள் உதவியைநாடுவார்கள்.அரசாங்கக் காரியம் இழுபறியாகி முடியும்.சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுன ராசி காரர்களே:
பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவதில் சிக்கல்கள் ஏற்படும் ரகசியங்களை வெளியிட வேண்டாம். மன உளைச்சல் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
கடக ராசி நேயர்களே:
பிள்ளைகளால் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:
பழைய பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களுடைய பணிகளில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
கன்னி ராசி காரர்களே:
திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். எதிரிகளால் இருந்த பிரச்சினைகள் விலகும். உறவினர்களாலும் நண்பர்களாலும் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும்.வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம்.
துலாராசி உறவுகளே:
உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும்.சிலருக்கு மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பேசும்போது பொறுமை அவசியம்.உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும்.னதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.
விருச்சிக ராசி நேயர்களே:
பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக்கூடும்.பணப்புழக்கம் கணிசமாக உயரும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே:
சந்திராஷ்டமம் நீடிப்பதால் கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும்.குடும்பத்தில் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகும். நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும்.புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
மகர ராசி காரர்களே:
கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். அரசாங்கக் காரியம் அனுகூலமாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.
கும்ப ராசி உறவுகளே:
சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும்.குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.சிலருக்கு தந்தையுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவருடன் அனுசரணையாக நடந்துகொள்ள முயற்சி செய்யவும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள். எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும்
மீன ராசி நேயர்களே:
அடிக்கடி மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலைய வேண்டியிருக்கும். வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்கும்.அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.