இன்றைய ராசி பலன் – 23.07.2020
இன்றைய பஞ்சாங்கம்,23-07-2020, ஆடி 08, வியாழக்கிழமை, திரிதியை திதி மாலை 05.03 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. மகம் நட்சத்திரம் மாலை 05.44 வரை பின்பு பூரம். அமிர்த யோகம் மாலை 05.44 வரை பின்பு சித்த யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. ஸ்வர்ண கௌரி விரதம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷ ராசி நேயர்களே: வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். ள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.
ரிஷப ராசி அன்பர்களே: அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும்.அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றத்தால் மன உளைச்சல் உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.
எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள்.
மிதுன ராசி காரர்களே: நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு.. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். தந்தையின் தேவையை நிறைவேற்றும் வகையில் சிறிது அலைச்சல் ஏற்படக்கூடும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
கடக ராசி நேயர்களே: உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த தகவல் கிடைக்கும்.கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு.வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். தந்தையின் தேவையை நிறைவேற்றும் வகையில் சிறிது அலைச்சல் ஏற்படக்கூடும்.கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும்
சிம்ம ராசி அன்பர்களே:இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும்.திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன் கிட்டும். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சாதுர்யமாகச் சமாளித்துவிடுவீர்கள்.அரசால் ஆதாயம் உண்டு.பழைய பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள்.
கன்னி ராசி காரர்களே: உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்லசெய்தி வந்து சேரும்.பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.உத்தியோகத்தில் சக தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
துலாராசி உறவுகளே:பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். எதிரிகள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உதவி கேட்டு வருவார்கள்.
விருச்சிக ராசி நேயர்களே: பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும். எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வேலைபளு அதிகரித்தாலும் அதற்கேற்ப நற்பலன்களும் கிடைக்கும்.
தனுசு ராசி அன்பர்களே:சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.
மகர ராசி காரர்களே: சந்திராஷ்டமம் இருப்பதால் அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் மறைமுகப் பிரச்சினைகள் வரும். செலவுகளைச் சமாளிக்க கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் சிலருக்கு ஏற்படும்.மன இறுக்கங்கள் உருவா கும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
கும்ப ராசி உறவுகளே: சகோதரர்களுக்காகச் செலவு செய்யவேண்டி வரும்.உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு நண்பர்கள் மூலம் பணவரவு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். . தொழிலில் லாபம் வரும்.நட்பால் ஆதாயம் உண்டு.
மீன ராசி நேயர்களே:
எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.நண்பர்களால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.