இன்றைய ராசி பலன் 24.05..2019
புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.24-05-2019, வைகாசி 10, வெள்ளிக்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை சஷ்டி திதி. உத்திராடம் நட்சத்திரம் காலை 07.30 வரை பின்பு திருவோணம். சித்தயோகம் காலை 07.30 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். ஹயக்ரீவர்-முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
மேஷராசி நேயர்களே: தந்தைவழி உறவினர்களின் வருகை உற்சாகம் தருவதுடன் செலவுகளையும் ஏற்படுத்தும்.விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். டும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகச் சில குழப்பங் கள் ஏற்படக்கூடும்.
ரிஷபராசி அன்பர்களே:கணவன் – மனைவிக் கிடையே ஏற்பட்டிருந்த பிரச்னைகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும்.குடும்பத்தில்அமைதி திரும்பும். பழைய கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும்.புண்ணிய ஸ்தலங்கள் சென்றுவருவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடையே உங்கள் கௌரவமும் மதிப்பும் அதிகரிக்கும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
மிதுனராசி காரர்களே:திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். வழக்குகளில் சற்று இழுபறியான நிலையே காணப்படுகிறது. கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம். உங்கள் பணிகளையும் மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம்.
கடகராசி நேயர்களே: பிள்ளைகள் வழியில் பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு.எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். தந்தையின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும்.மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு.
சிம்மராசி அன்பர்களே: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு பிணக்குகள் ஏற்படக்கூடும். அனுசரித்துச் செல்வது நல்லது.அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வெளியூர்ப் பயணங்களின்போது கைப் பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். வியாபாரத்தில்ரெட்டிப்பு லாபம் உண்டு.
கன்னி ராசி காரர்களே:தந்தையுடன் சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்படக் கூடும்.தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம்.பிள்ளைகள் கேட்டதை வாங்கித்தருவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பொறுமை அவசியம். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
துலாராசி உறவுகளே:வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.. மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயா ருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும்.சிலருக்கு சலுகை களுடன் கூடிய இடமாறுதலுக்கு வாய்ப்பு உண்டு. தொழில் ரீதியாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். . வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். வருமானம் போதுமான அளவுக்குக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.
விருச்சிகராசி நேயர்களே: உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டு எடுப்பது நல்லது.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் பெருகும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.
தனுசுராசி அன்பர்களே:கடந்த இரண்டுநாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பாராத சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். சகோதர வகையில் இருந்து வந்த சச்சரவுகள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும். திடீர் தனவரவு உண்டாகும். கடன் பிரச்சினை தீரும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தால், சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
மகரராசி காரர்களே:ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் பிள்ளைகளால் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். வராது என்று நினைத்த கடன் வந்து சேரும்.மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும்.
கும்பராசி உறவுகளே:குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.. திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில்போட்டிகளை சமாளிப்பீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.
மீனராசி நேயர்களே:திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படு வதற்கில்லை.திடீர் என்று சுபசெய்தி வரும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வழக்குகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படுவதற்கில்லை.