இன்றைய இன்றைய ராசி பலன் 24.06.2020
இன்றைய பஞ்சாங்கம்,24-06-2020, ஆனி 10, புதன்கிழமை, திரிதியை திதி காலை 10.14 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. பூசம் நட்சத்திரம் பகல் 01.10 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்த யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. விநாயகர்- நவகிரக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
மேஷ ராசி நேயர்களே:
காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.பயணங்களில் கவனம் தேவை மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே:
வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.சுபசெலவுகள் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மிதுன ராசி காரர்களே:
மற்றவர்களுடன் பேசும்போது மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு..சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும்.
கடக ராசி நேயர்களே:
பிள்ளைகளால் மகிழ்ச்சி கூடும். நீங்கள் ஒன்று பேசப்போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள் பொறுமை அவசியம்.சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன் கிடைக்கும்.சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக் கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. புதுவேலை கிடைக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:
எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.ஆடை ஆபரணம் சேரும். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும்.தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.
கன்னி ராசி காரர்களே:
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சிலருக்கு பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களோடு பேசி மகிழும் வாய்ப்பு ஏற்படும். தொழில் ரீதியாக வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாராசி உறவுகளே:
நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். புதிய பொருள் வீடு வந்து சேரும்.சகோதர வகையில் எதிர் பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்..வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:
சுபகாரியங்கள் கைகூடும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.. நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் அனைத்தும் இனிதே முடியும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும்.
தனுசு ராசி அன்பர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். உங்களை யாரும் கண்டு கொள்வதில்லை என்று ஆதங்கப்படுவீர்கள். ஒரே விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள்.புதிய முயற்சிகளை மேற் கொள்ளவேண்டாம் தள்ளி வைப்பது நல்லது.
மகர ராசி காரர்களே:
கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.திருமண விஷயங்கள் சாதகமாக முடியும்.மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும்.தந்தை வழி உறவினர்களால் காரிய அனுகூலம் ஏற்படும்.புதிய வேலை வாய்ப்புகள் அமையும். புதிய முயற்சி சாதகமாக முடியும்.வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள்.
கும்ப ராசி உறவுகளே:
எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.அரசால் அனுகூலம் உண்டு. தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.
மீன ராசி நேயர்களே:
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் வகையில் வீண்மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.எடுக்கும் முயற்சிகளில் உடனிருப்பவர்களால் இடையூறுகள் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும்.வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும்.தேவையில்லாத டென்ஷன் ஏற்படும்.