இன்றைய ராசி பலன் – 24.10.2021
இன்றைய பஞ்சாங்கம்,24-10-2021, ஐப்பசி 07, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 05.44 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. ரோகிணி நட்சத்திரம் பின்இரவு 01.01 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.
மேஷ ராசி நேயர்களே:தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும்.குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் நீங்கும்.ஆடம்பர செலவுகளை குறைத்து சிக்கனமாக செயல்படுவது நல்லது நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளித்தாலும் செலவுகள் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.
ரிஷப ராசி அன்பர்களே:கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகி மகிழ்ச்சி பொங்கும்.சிலருக்கு நண்பர்களிடம் எதிர் பார்த்த பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு.பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும்.யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
மிதுன ராசி காரர்களே:பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். சகோதர வகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும்.பூர்வீக சொத்துக்களால் தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.
கடக ராசி நேயர்களே:நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உறவினர்கள் மூலம் கேட்கும் செய்தி சிறிது சங்கடத்தைத் தரக்கூடும்.பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
சிம்ம ராசி அன்பர்களே:உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். எதிர்பாராத செலவு களும் ஏற்படக்கூடும்.குடும்பத்தோடு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார்.உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளை களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
கன்னி ராசி காரர்களே: உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். தேவையான பணம் கையில் இருக்கும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்துவிடுவீர்கள்.காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
துலாராசி உறவுகளே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம்.குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும்.வியாபார ரீதியான பயணங்களில் அலைச்சல் உண்டாகும். அவ்வப்போது மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
விருச்சிக ராசி நேயர்களே:கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும்.காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும்.திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பணவரவு தாரளமாக இருக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள்.
தனுசு ராசி அன்பர்களே:சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்க மாக நடந்துகொள்வது நல்லது.உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை.
மகர ராசி காரர்களே:உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும்.சிலருக்கு தாய்வழி உறவினர் களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை.சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மாலை யில் நண்பர்கள் மூலம் கேட்கும் செய்தி உங்களை உற்சாகப்படுத்தும்.உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.
கும்ப ராசி உறவுகளே:எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். மாலையில் உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள்.
மீன ராசி நேயர்களே:
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும்.சுபகாரிய பேச்சுக்களில் இழுபறி நிலை நிடிக்கும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும்.உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம்.