இன்றைய ராசி பலன் – 25.02.2021
இன்றைய பஞ்சாங்கம், 25-02-2021, மாசி 13, வியாழக்கிழமை, திரியோதசி திதி மாலை 05.19 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பூசம் நட்சத்திரம் பகல் 01.17 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஸ்ரீநடராஜர் அபிஷேகம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். நவகிரக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷ ராசி நேயர்களே:
நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் பொறுமை அவசியம்.வெளியூர் பயணங்களால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிப்பு கூடும். திடீர் செலவுகள் கையிருப்பைக் கரைக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே:
பேச்சில் கம்பீரம் பிறக்கும்.முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள்.குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப் படும்.உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும்.
மிதுன ராசி காரர்களே:
வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்.பிரச்னைகள் வெகுவாக குறையும்.சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும் என்றாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும்.எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.நவீன மின்னணு மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.
கடக ராசி நேயர்களே:
திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.பிரச்னைகள் வெகுவாக குறையும். தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் அவருடன் பேசும் போது வார்த்தைகளில் நிதானம் தேவை.சிறு சிறு பொருளாதார பிரச்சினைகள் ஏற்படலாம்.
சிம்ம ராசி அன்பர்களே:
திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தாயாருடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும்.செலவுகளும் வரவுக்கு மீறி அதிகரிக்கும். அவர் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும்.முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். குடும்பத்தினருடன் கோபத்தை காட்டாதீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
கன்னி ராசி காரர்களே:
பணவரவு தாராளமாக இருக்கும்.தந்தைவழி உறவினர்களால் குடும்பத்தில் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல ஏற்படும்.
துலாராசி உறவுகளே:
புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.உறவினர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும்.உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள்.கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
விருச்சிக ராசி நேயர்களே:
எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். உடல்நலனில் கவனமாக இருப்பது அவசியம்.
தனுசு ராசி அன்பர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும்.நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும்.
மகர ராசி காரர்களே:
வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும்.வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் விற்ப னையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள்.பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.
கும்ப ராசி உறவுகளே:
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும்.வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.
மீன ராசி நேயர்களே:
அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். தந்தையாரின் உடல் ஆரோக்கியம் மேம் படும்.நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும்.வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும்.