இன்றைய ராசி பலன் – 25.10.2020
இன்றைய பஞ்சாங்கம், 25-10-2020, ஐப்பசி 09, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி காலை 07.42 வரை பின்பு வளர்பிறை தசமி. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 04.23 வரை பின்பு சதயம். மரணயோகம் பின்இரவு 04.23 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை.இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
மேஷ ராசி நேயர்களே:உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும்.
ரிஷப ராசி அன்பர்களே:பிள்ளைகளின் சொல்லுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணிச்சுமை குறையும்.பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
மிதுன ராசி காரர்களே:ராசிக்கு பகல் 3.26 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.பழைய கசப்பான சம்பவங்களை பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். உடல்நலனில் கவனம் தேவை.இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.
கடக ராசி நேயர்களே:ராசிக்கு பகல் 3.26 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.முன் கோபத்தை குறைத்து திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். செய்யும் செயல்களில் மந்த நிலை ஏற்படலாம்.
சிம்ம ராசி அன்பர்களே:குடும்பத்தோடு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.தொடங்கிய காரியங்கள் அனுகூலமாக முடியும். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களால் முடிந்தவற்றை செய்வீர்கள். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார்.பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டி லாபத்தை பெருக்குவீர்கள்.
கன்னி ராசி காரர்களே: பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள்.உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். சுபகாரிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். மற்றவர்களிடம் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.
துலாராசி உறவுகளே:எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் அதற்கேற்ப பணவரவும் இருப்பதால் பிரச்னை எதுவும் இருக்காது.உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளித்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும்.பால்ய நண்பர்கள் உதவுவார்கள். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
விருச்சிக ராசி நேயர்களே:பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். முக்கியமான முடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம். நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.
தனுசு ராசி அன்பர்களே:குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.தரும காரியங்கள் செய்து நிம்மதி அடைவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழையபிரச்சினைக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். மாலையில் குடும்பத்தினருடன் உற்சாகமாகப் பேசி மகிழ்வீர்கள்.வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். எதிரிகள் பணிந்து போவார்கள்.
மகர ராசி காரர்களே:எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம்.சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும்.மருத்துவ செலவுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.குடும்பத்தினரிடம் மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள்.
கும்ப ராசி உறவுகளே:யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்படலாம். சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.நண்பர்களுடன் வீண் விவாதம் வந்து போகும்.
மீன ராசி நேயர்களே:
பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது மிக அவசியம்.குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.