இன்றைய ராசி பலன் – 27.09.2021
இன்றைய பஞ்சாங்கம், 27-09-2021, புரட்டாசி 11, திங்கட்கிழமை, சஷ்டி திதி பகல் 03.43 வரை பின்பு, தேய்பிறை சப்தமி. ரோகிணி நட்சத்திரம் மாலை 05.41 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் மாலை 05.41 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷ ராசி நேயர்களே:கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளை கள் மூலம் திடீர் செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள்.கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். காலதாமதமாக முடிய கூடிய காரியங்கள் கூட எளிதில் முடியும்.
ரிஷப ராசி அன்பர்களே: நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள்.கணுக்கால் வலிக்கும்.நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும்.எவ்வளவு பணம் கொடுத்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக் கூடும்.வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
மிதுன ராசி காரர்களே:உறவினர் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார்.உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தந்தைவழி உறவினர்களால் காரிய அனுகூலமாகும்.எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து செல்லும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள்.
கடக ராசி நேயர்களே:உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.உறவினர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். உறவி னரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து செல்லும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
சிம்ம ராசி அன்பர்களே:சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.உறவினர் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். பிற்பகலுக்குமேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து செல்லும்.மாலையில் பிள்ளைகளுடன் கலந்து பேசி முக்கிய முடிவு ஒன்று எடுப்பீர்கள்.
கன்னி ராசி காரர்களே:தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.குடும்பம் தொடர் பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும்.தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். முயற்சிகள் வெற்றிகரமாக முடியும்.கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம்
துலாராசி உறவுகளே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும்.உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சி தரும்.வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பிற்பகலுக்கு மேல் உற்சாகமாக இருப்பீர்கள்.குடும்பத்தில் பல விஷயங்களை நீங்களே பார்க்க வேண்டி வரும்.
விருச்சிக ராசி நேயர்களே:மனைவி வழிஉறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.சகோதரர்களிடம் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.குடும்பத்தில் சிக்கனமுடன் செயல்படுவதால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். குடும்பத்தி னரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே:நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
மகர ராசி காரர்களே:பிரார்த்தனையை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள்.வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்ல வும்.பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை காணப்படும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதர வாக இருப்பார். வரவை விட செலவுகள் அதிகரிக்கும்.
கும்ப ராசி உறவுகளே:சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படுவார்கள்.பிள்ளைகள் வழியில் சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். குடும்பம் தொடர்பான முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
மீன ராசி நேயர்களே:
சொந்த-பந்தங்கள் மதிக்கும் படி நடந்து கொள்வீர்கள். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவார்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வரு வார்கள். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.