இன்றைய ராசி பலன் – 27.10.2020
இன்றைய பஞ்சாங்கம், 27-10-2020, ஐப்பசி 11, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி பகல் 10.47 வரை பின்பு வளர்பிறை துவாதசி. சதயம் நட்சத்திரம் காலை 06.36 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. வாஸ்து நாள் காலை 07.47-08.23 புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷ ராசி நேயர்களே:ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் செலுத்தவும்.உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும்.எங்கு சென்றாலும் மதிப்பு மரியாதை கூடும். தாய்மாமன் வழியில் எதிர் பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிக ரிக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே:நண்பர்கள் வகையில் திடீர் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் பிற்பகலுக்குமேல் பணியாளர்களால் வீண் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். சக வியாபாரிகளிடம் இணக்கமாக நடந்து கொள்ளவும்.உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள்.
மிதுன ராசி காரர்களே:தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பிற்பகலுக்குமேல் மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் நிதானம் தேவை.வண்டி வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். மாலையில் உறவினர்கள் மூலம் கிடைக்கும் தகவல் சற்று சங்கடத்தை ஏற்படுத்தும்.வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும்.
கடக ராசி நேயர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.உத்தியோகத்தில் சகஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். அவசியம் ஏற்பட்டால் தவிர வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்.
சிம்ம ராசி அன்பர்களே: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்து கொள்வார்கள்.குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள்.
கன்னி ராசி காரர்களே:சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உங்கள் முயற்சிக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.
துலாராசி உறவுகளே:. குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காகப் பாடுபட வேண்டி இருக்கும்.உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினை குறையும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும். பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்பு களைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும்.வியாபார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம்.புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும்.
விருச்சிக ராசி நேயர்களே:மன அமைதி இருக்கும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருப்பதுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.தாய் வழி உறவுகளால் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. வேற்று மதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது.
தனுசு ராசி அன்பர்களே:பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதரர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். முக்கிய முடிவுகள் எடுக்க நேரிட்டால் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டு எடுக்கவும்.தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
மகர ராசி காரர்களே:எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.நீண்ட நாள் பிரச்சினைகள் வெகுவாக குறையும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க் கவும்.உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.. நவீன மின்னணு மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பொறுமையாக இருப்பது அவசியம்.
கும்ப ராசி உறவுகளே: ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.சொந்தபந்தங்களின் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். தாய்வழி உறவி னர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சியும் உற்சாகமும் தருவதாக இருக்கும்.குடும்பத்தில் அமைதி நிலவும். தாயின் விருப் பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில்பாக்கிகளை நயமாகப்பேசி வசூலிக்கப்பாருங்கள்.
மீன ராசி நேயர்களே:
வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தரு வார்.பழைய கடன் பிரச்சினைகள் அவ்வப்போது மனசை வாட்டும். செலவுகள் அதிகரிப்பதால் சிலருக்கு சிறிய அளவில் கடன் வாங்க நேரிடும்.உத்தியோகத்தில் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். இளைய சகோ தரரால் சங்கடங்கள் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வீண் செலவுகள் செய்ய நேரிடும்.