இன்றைய ராசி பலன் – 27.12.2020
இன்றைய பஞ்சாங்கம், 27-12-2020, மார்கழி 12, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 06.21 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. கிருத்திகை நட்சத்திரம் பகல் 01.19 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது.இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
மேஷ ராசி நேயர்களே:
கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகளால் மனம் சஞ்சலப்படும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்களால் குடும்பத் தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:
உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்றுக்கான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும்.பண விஷயத்தில் சாக்குப் போக்கு சொல்லி சமாளிப்பீர்கள்.
மிதுன ராசி காரர்களே:
எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. உறவினர்களால் ஆதாயமும் மகிழ்ச்சியும் உண்டாகும்.யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.அரசு காரியங்கள் இழுபறியாகும். குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு ஒத்தாசையாக இருப்பார்கள்.வீண் செலவுகள் தோன்றும்.அம்பிகையை வழிபட சங்கடங்கள் தீரும்.
கடக ராசி நேயர்களே:
குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். வாழ்க்கைத்துணையின் விருப்பங் களை நிறைவேற்றுவீர்கள். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும்.பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதிகாரிகளின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:
பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். மற்றவர்களிடம் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம். உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள்.
கன்னி ராசி காரர்களே:
பயணங்கள் சிறப்பாக அமையும். சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
துலாராசி உறவுகளே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சகோதர வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும்.நெருங்கியவர்களால் மனநிம்மதி குறையும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். பிள்ளைகளால் அலைச்சலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும்.
விருச்சிக ராசி நேயர்களே:
பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.குடும்பத்தில் இருந்த சின்னச் சின்னக் குழப்பங்கள் விலகும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள்.எதிரிகள் பணிந்து போவார்கள்.ள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். காரியங்களில் சிறுசிறு தடைகள் உண்டாகும் என்பதால் செயல்களில் பொறுமை தேவை.
தனுசு ராசி அன்பர்களே:
வியாபாரத்தில் பற்று வரவு உயரும்.வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். முக்கியமான முடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம்.உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.பழைய சிக்கலில் ஒன்று தீரும்.
மகர ராசி காரர்களே:
பழைய சிக்கலில் ஒன்று தீரும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும்.. திருமணம் சுப காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால், பொறு மையைக் கடைப்பிடிக்கவும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.
கும்ப ராசி உறவுகளே:
தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும்.திருமண முயற்சிகளில் சில தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் செயல்படுவீர்கள்.வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள்.
மீன ராசி நேயர்களே:
குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பம் தொடர்பான முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம்.வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். மற்றவர்களு டன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.பணவரவு அமோகமாக இருந்து கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகர மாக இருப்பார்கள். மனதிற்கு இதமான செய்தி வரும்.