இன்றைய ராசி பலன் 28.05..2019
புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.28-05-2019, வைகாசி 14, செவ்வாய்க்கிழமை, நவமி திதி பகல் 01.31 வரை பின்பு தேய்பிறை தசமி. பூரட்டாதி நட்சத்திரம் மாலை 06.58 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் மாலை 06.58 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷராசி நேயர்களே:குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.திடீர் என்று சுபசெய்தி வரும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.எதிர்பாராத சந்திப்பு நிகழும். பயணங் களால் பயனடைவீர்கள்.
ரிஷபராசி அன்பர்களே: எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.குடும்பத்தில் அமைதி நிலவும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய் வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பும், அதனால் அனுகூலமும் உண்டாகும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
மிதுனராசி காரர்களே:பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சிலருக்குக் குடும்ப விஷயமாக திடீர்ப் பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரிடும். அதிகாரப் பதவியில் இருப்ப வர்கள் அறிமுகமாவார்கள்.உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.
கடகராசி நேயர்களே:மதியம் 12.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத பிரச்சனைகள் உங்களைத் தேடி வரும்.. பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
சிம்மராசி அன்பர்களே: துணிச்சலாகச் செயல்படுவீர்கள்.கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங் கள் வந்துப் போகும். தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப் பார்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். மதியம் 12.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அமைதியாக இருப்பது நல்லது.
கன்னி ராசி காரர்களே: தந்தை வழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். சிலருக்கு வெளியூரில் உள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.உயர் அதிகாரிகளின் ஆதரவால் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.சிலருக்கு சகோதரர்களால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படக்கூடும்
துலாராசி உறவுகளே: வீண் அலைச்சலையும் செலவுகளை யும் கொடுத்தாலும், சாதகமாக முடிந்துவிடும்.வரவிற்கேற்ற செலவுகள் இருக்கும்.பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். குடும்பத்தினரால் நிம்மதி குறைவு உண்டாகும். மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும்.உங்களைச் சுற்றியிருப்பவர் களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.
விருச்சிகராசி நேயர்களே:சுபகாரிய முயற்சிகளில் தாமதம் உண்டாகும். பயணங்களில் கவனம் தேவை.உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். சிலருக்கு வெளியூரில் உள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.. சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
தனுசுராசி அன்பர்களே:உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக்கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு.வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சக நண்பர்களின் அதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள்.
மகரராசி காரர்களே:அழகு, இளமைக் கூடும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடன் இருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம்.தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அரசாங்க அதிகாரிகளின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும்.
கும்பராசி உறவுகளே: சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும் என்றாலும், மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும்.வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத் தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.
மீனராசி நேயர்களே: சகோதர வகையில் விவாதங்கள் வரக்கூடும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும்.தாயின் உடல்நலனில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவது அவசியம். எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள்.