இன்றைய ராசி பலன் – 28.06.2020
28-06-2020, ஆனி 14, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி இரவு 12.36 வரை பின்பு வளர்பிறை நவமி. உத்திரம் நட்சத்திரம் காலை 08.46 வரை பின்பு அஸ்தம். அமிர்த யோகம் காலை 08.46 வரை பின்பு சித்த யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஆனி திருமஞ்சனம். ஸ்ரீநடராஜர் அபிஷேகம். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
மேஷ ராசி நேயர்களே:
உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும்.பூர்வீகசொத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். மாலையில் குடும்பத்துடன் வீட்டில் தெய்வ வழிபாடு செய்வீர்கள்.வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:
உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள்.எதிலும் பொறுமையைக் கடைப் பிடிக்கவேண்டிய நாள்.ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.பண பற்றாக்குறையால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம்.
மிதுன ராசி காரர்களே:
குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும்.உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
கடக ராசி நேயர்களே:
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.பெரிய மனிதர்களின் சந்திப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள்.சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:
கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும்.உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம்.
கன்னி ராசி காரர்களே:
மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு கொண்டிருக்க வேண்டாம்.சகோதர சகோதரி வழியில் நன்மைகள் உண்டாகும். தாயின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. தாய்வழியில் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும்.
துலாராசி உறவுகளே:
உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும் முக்கிய கோப்புகளை கையாளும் போதுஅலட்சியம் வேண்டாம்.மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது.
விருச்சிக ராசி நேயர்களே:
புதிய முயற்சிகளில் நன்கு சிந்தித்து ஈடுபடவும்.கூட்டாளிகளுடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். நண்பர்களுக்காக செலவு செய்ய வேண்டி வரும்.
தனுசு ராசி அன்பர்களே:
வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.வியாபாரத்தால் புதுதொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள்.மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள்
மகர ராசி காரர்களே:
பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தாய்வழிஉறவினர்களால் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறி சற்று முன்னேற்றம் ஏற்படும்.
கும்ப ராசி உறவுகளே:
சந்திராஷ்டமம் இருப்பதால் எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும்.மன உளைச்சல் அதிகமாகும்.புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும்.பிற்பகலுக்குமேல் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
மீன ராசி நேயர்களே:
தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.நவீனகரமான பொருட்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். சகோதரர் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.கடன் பிரச்சினைகள் தீரும் சிலருக்கு எதிர்பாராத பணவரவும் பொருள்சேர்க்கையும் ஏற்படும்.