இன்றைய ராசி பலன் – 28.07.2020
இன்றைய பஞ்சாங்கம், 28-07-2020, ஆடி 13, செவ்வாய்க்கிழமை, நவமி திதி பின்இரவு 02.59 வரை பின்பு வளர்பிறை தசமி. சுவாதி நட்சத்திரம் காலை 09.41 வரை பின்பு விசாகம். சித்த யோகம் காலை 09.41 வரை பின்பு மரண யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷ ராசி நேயர்களே:
வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் வீண் செலவுகளும் ஏற்படும்.சகோதர வகையில் நன்மை உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும்.கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும்.பெண்கள் தம் பொறுப்பு அறிந்து நடந்து கொள்வார்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:
எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். குடும்பத்துடன் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.
மிதுன ராசி காரர்களே:
சுபகாரிய முயற்சிகளில் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் பிடிவாதம் சற்று கோபத்தை ஏற்படுத்தினாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.பூர்வீக சொத்துக்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
கடக ராசி நேயர்களே:
அரசு அதிகாரிகள் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.பிள்ளைகள் வழியில் மன சங்கடங்கள் உண்டாகும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும்.
சிம்ம ராசி அன்பர்களே:
வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சகோதர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.வேலையில் பணி நிமித்தமாக புதிய நபர்களின் நட்பு கிட்டும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும்.வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.
கன்னி ராசி காரர்களே:
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.புத்திர வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும்.பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். எதிர்பாராத வேலைச்சுமையின் காரணமாக சற்று சோர்வு உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.
துலாராசி உறவுகளே:
வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். உறவினர்களுக்காகச் செலவு செய்யவேண்டி வரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பக்குவமாகச் சமாளித்து விடுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு நற்பலனை தரும்.
விருச்சிக ராசி நேயர்களே:
தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அனாவசியமாக மற்றவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார்.அரசாங்க விஷயம் தாமதமாகும். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதம் ஆகும்.
தனுசு ராசி அன்பர்களே:
எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிரபலங்களால் ஆதாயம் உண்டு. நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
மகர ராசி காரர்களே:
இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும். பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சல் ஏற்படக்கூடும்.சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல் படுவார்கள்.
கும்ப ராசி உறவுகளே:
குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். தாய்வழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது.தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.சொத்து சம்பந்தமான வழக்குகளில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும்.. கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.
மீன ராசி நேயர்களே:
சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பில் முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில பிரச்னை கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். சுப முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.