இன்றைய ராசி பலன் – 29.07.2021
இன்றைய பஞ்சாங்கம், 29-07-2021, ஆடி 13, வியாழக்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 03.55 வரை பின்பு தேய்பிறை சப்தமி. உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 12.02 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷ ராசி நேயர்களே:பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். எதிர்ப்புகளும் விமர்சனங்களும் நீங்கும்.சொத்து சம்பந்தமான வழக்குகளில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
ரிஷப ராசி அன்பர்களே:உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.பிள்ளைகளால் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். ஆனால், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள்.
மிதுன ராசி காரர்களே:உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும்.தந்தையாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் செலவுகள் குறையும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே காணப்படும்.உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
கடக ராசி நேயர்களே:வீண் செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.
சிம்ம ராசி அன்பர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.முன்கோபத்தால் நல்லவர்களை இழக்கவேண்டி வரும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். உறவினர்கள் , நண்பர்களின் அன்பு தொல்லை உண்டு. சிலருக்கு அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படக்கூடும். மன உளைச்சல் தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.
கன்னி ராசி காரர்களே:மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும்.அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தாய்மாமன் வழியில் சுபச்செலவு ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது.சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும்.
துலாராசி உறவுகளே:சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும்.பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே: நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.தேவையற்ற அலைச்சல்கள் வீண் விரயங்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும்.பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். பொருளாதார நெருக்கடிகள் குறையும்.
தனுசு ராசி அன்பர்களே:பழைய கடனையை தீர்க்க உதவிகள் கிடக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களிடம் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படும்.பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படும்.
மகர ராசி காரர்களே:சொத்துப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். குடும்பப் பொறுப்புகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.பிள்ளைகள் கேட்பதை மறுப்பு சொல்லா மல் மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள்.குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சகோதர வகையில் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.
கும்ப ராசி உறவுகளே:புதியவர் நட்பால் உற்சாகம் அடைவீர்கள்.சிலருக்குத் திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும்.எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எதுவும் இன்றைக்கு எடுக்க வேண்டாம்.வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
மீன ராசி நேயர்களே:
உதவி செய்வதாக வாக்குக்கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள்.குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம்.திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது.வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும்.