இன்றைய ராசி பலன் – 30.01.2021
இன்றைய பஞ்சாங்கம், 30-01-2021, தை 17, சனிக்கிழமை, துதியை திதி இரவு 10.13 வரை பின்பு தேய்பிறை திரிதியை. மகம் நட்சத்திரம் பின்இரவு 02.28 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் பின்இரவு 02.28 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
மேஷ ராசி நேயர்களே:
நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன் கிட்டும்.தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே:
பேச்சில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. சுப முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம்.
மிதுன ராசி காரர்களே:
சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். மாலையில் வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது.உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை கூடும்.திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.
கடக ராசி நேயர்களே:
கடனாக கொடுத்தபணத்தை வசூலிப்பீர்கள். மனதில் அவ்வப்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.நீண்ட நாள் பிரச்சினைகள் தீரும்.தொடங்கும் காரியம் இழுபறியானாலும் அனுகூலமாக முடியும்.
சிம்ம ராசி அன்பர்களே:
ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.அழகு இளமை கூடும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதுடன் அவர்கள் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்.
கன்னி ராசி காரர்களே:
தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்கள் உண்டாகும்.கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமை யைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு எதிர்பாராத இனிய நிகழ்வுகள் ஏற்படலாம்.
துலாராசி உறவுகளே:
வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும்.பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எதிர்பாராத ஆதாயங்களுக்கு வாய்ப்பு உண்டு.நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். சிலருக்கு வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
விருச்சிக ராசி நேயர்களே:
தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும்.உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். கணவன் – மனைவிக்கிடையே மூன்றாவது நபர்களின் தலையீட்டை கண்டிப்பாக அனுமதிக்கவேண்டாம்.உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப்பகிர்ந்து கொள்வார்கள்.
தனுசு ராசி அன்பர்களே:
சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் ரீதியான பயணங்களால் வீண் அலைச்சல் பணவிரயங்கள் ஏற்படலாம்.
மகர ராசி காரர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தந்தைவழி உறவுகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும்.அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள்.தேவையற்ற வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும்.ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு செலவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்
கும்ப ராசி உறவுகளே:
திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது.
மீன ராசி நேயர்களே:
விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும்.தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும்.குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.த்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.