இன்றைய ராசி பலன் 30.05..2019
புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.30-05-2019, வைகாசி 16, வியாழக்கிழமை, ஏகாதசி திதி மாலை 04.38 வரை பின்பு தேய்பிறை துவாதசி. ரேவதி நட்சத்திரம் இரவு 11.03 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் இரவு 11.03 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷராசி நேயர்களே:செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.போதுமான பணம் கையில் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். தாய்வழி உறவினர்கள் வகையில் சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும்.உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை கூடும்.
ரிஷபராசி அன்பர்களே:. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதிப் பெருகும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்.உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல வாய்ப்புகள் உருவாகும். சிலருக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
மிதுனராசி காரர்களே:அரசாங்கக் காரியங்கள் சற்று இழுபறிக்குப் பிறகே முடியும்.உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
கடகராசி நேயர்களே:சிலருக்கு உறவினர்களால் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும்.மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
சிம்மராசி அன்பர்களே:சந்திராஷ்டமம் தொடர்வதால் தாயின் ஆலோசனைப்படி செயல்படுவது நன்மை தரும். இன்று கிடைக்கும் என்று எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போங்கள். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும்.
கன்னி ராசி காரர்களே:தாயின் உடல் நலனில் கவனம் தேவை.சவாலான வேலைகளையும் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். மாலையில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படும்.வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.
துலாராசி உறவுகளே: புதிய முயற்சி எடுப்பதற்கு உகந்த நாள்.சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிரிகள் வகையில் ஏற்பட்ட பிரச்னைகள் மறையும். குடும்பம் தொடர்பாக எடுக்கும் முக்கிய முடிவு சாதகமாக முடியும்.பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும்.வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு உண்டாகும்.
விருச்சிகராசி நேயர்களே:பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை.
தனுசுராசி அன்பர்களே:உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.தொழிலில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.வெளியூரிலிருந்து நீண்ட நாளாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கக்கூடும்.
மகரராசி காரர்களே:புதிதாகத் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாழ்க்கைத் துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். குடும்பத்துடன் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள்.உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள்.
கும்பராசி உறவுகளே:தேவையான பணம் கையில் இருந்தாலும் தேவையற்ற செலவுகள் ஏற்படுவதால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும்.திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படும்.மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும்.
மீனராசி நேயர்களே:கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் சில செலவுகள் ஏற்படக்கூடும்.கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள்.சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்து கொள்வார்கள் அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.