இன்றைய ராசி பலன் – 31.10.2020
இன்றைய பஞ்சாங்கம், 31-10-2020, ஐப்பசி 15, சனிக்கிழமை, பௌர்ணமி திதி இரவு 08.19 வரை பின்பு தேய்பிறை பிரதமை. அஸ்வினி நட்சத்திரம் மாலை 05.57 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌணர்மி விரதம். அன்னாபிஷேகம். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
மேஷ ராசி நேயர்களே:
எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்து விடுவீர்கள்.வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும்.குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும்.
ரிஷப ராசி அன்பர்களே:
தாயாருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும்.எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் ஏற்படும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும்.விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப் பார்கள்.
மிதுன ராசி காரர்களே:
உங்களுக்கு பணப்புழக்கம் தாராளமா£க இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். உங்கள் சிரமம் அறிந்து உங்கள் பணிகளை குடும்பத்தினர் பகிர்ந்துகொள்வார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள்.
கடக ராசி நேயர்களே:
நண்பர்கள் முக்கிய விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும்.உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். சிலருக்குக் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.. பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும்.புதிய முயற்சியைக் காலையிலேயே தொடங்குவது நல்லது.
சிம்ம ராசி அன்பர்களே:
வார்த்தைகளில் நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். தாயின் உடல்நலனில் கவனம் தேவை.தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம், வீண் அலைச்சலையும் செலவுகளையும் கொடுத்தாலும், சாதகமாக முடிந்துவிடும்.உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.
கன்னி ராசி காரர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும்.சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும்.தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.குடும்பத்தில் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டிவரும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் நிதானம் தேவை.இனம்புரியாத பயம் வந்துபோகும்.
துலாராசி உறவுகளே:
தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். பிள்ளைகளால் பெருமை சேரும். சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் சிலதந்திரங்களை கற்று கொள்வீர்கள். உறவினர்களால் சங்கடங்கள் உண்டாகும்.உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும்.
விருச்சிக ராசி நேயர்களே:
பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற் பட்டு நீங்கும்.நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். பழைய உறவினர் நண்பர்கள் தேடிவருவார்கள். குடும்பப் பெரியவர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது அவசியம்.
தனுசு ராசி அன்பர்களே:
குடும்பத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பிரார்த்தனையை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக் கொள்வார்.உடன் பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு, அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.
மகர ராசி காரர்களே:
தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும்.தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவ னம் தேவை.பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். அரசாங்க அதிகாரிகளின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.பால்ய நண்பர்கள் உதவுவார்கள். சிலருக்கு பிள்ளைகளால் வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் திடீர் செலவுகள் உண்டாகும்.
கும்ப ராசி உறவுகளே:
நவீனகரமான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். சொத்துவாங்குவது விற்பது சாதகமாக முடியும். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்
மீன ராசி நேயர்களே:
தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். சிலருக்குத் தாய்மாமன் வழியில் ஆதாயம் உண் டாகும். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வுகள் கிடைக்கும்.சிலருக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் தள்ளிப் போனவாய்ப்புகள் தேடி வரும்.