இன்றைய ராசி பலன் – 31.12.2020
இன்றைய பஞ்சாங்கம், 31-12-2020, மார்கழி 16, வியாழக்கிழமை, பிரதமை திதி காலை 09.30 வரை பின்பு தேய்பிறை துதியை. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 07.49 வரை பின்பு பூசம். அமிர்தயோகம் இரவு 07.49 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷ ராசி நேயர்களே:
உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து, உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். எதிர் காலத்துக்குப் பயன் தரும் வகையில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.
ரிஷப ராசி அன்பர்களே:
சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்த்து விடுவது நல்லது.பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும்.
மிதுன ராசி காரர்களே:
மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
கடக ராசி நேயர்களே:
சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்கவேண்டி வரும்.
சிம்ம ராசி அன்பர்களே:
வழக்கில் அலட்சியம் வேண்டாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும். உற்றார் உறவினர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் உண்டாகும். குடும்பத்தினர் உங்களுடைய ஆலோசனையை ஏற்றுக்கொண்டு அதன்படி நடப்பார்கள். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர்கள்.வீண்அலைச்சல் காரணமாக உடல்அசதி உண்டாகும்.நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழச்சியை தரும்.
கன்னி ராசி காரர்களே:
பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். குடும்பத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். நண்பர்களால் வீண்செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.
துலாராசி உறவுகளே:
திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் பணியாளர்களால் சிறுசிறு சங்கடங்களும், செலவுகளும் ஏற்படக்கூடும்.எதிலும் வெற்றி பெறுவீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:
ராசிக்கு பகல் 01.38 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும்.வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும்.உற்றார் உறவினர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் உண்டாகும். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிப்பதன் காரணமாக உடல் அசதி ஏற்படும்.கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழியை யோசிப்பீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே:
ராசிக்கு பகல் 01.38 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.வாக்குறுதியை நிறைவேற்ற போராட வேண்டி வரும். கடன்கள் விவகாரத்தில் கவனமாக இருக்கவும்.ஊழியர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது அவசியம். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள்.
மகர ராசி காரர்களே:
பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள்.வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் சற்று கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நி யோன்யம் அதிகரிக்கும்.
கும்ப ராசி உறவுகளே:
பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலருக்கு தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.வியாபா ரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
மீன ராசி நேயர்களே:
பணப்புழக்கம் கணிசமாக உயரும்.எதிர்பாராத பண லாபம் உண்டாகும்.நண்பர்களின் உதவியால் பணப் பிரச்சினை ஓரளவு குறையும். கடன்களில் ஒரு பகுதியைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.தொழிலில் இருந்த தேக்க நிலை மாறி சற்று முன்னேற்றம் ஏற்படும்.