இன்றைய ராசிப்பலன் – 08-09-2021,
இன்றைய பஞ்சாங்கம், 08-09-2021, ஆவணி 23, புதன்கிழமை, துதியை திதி பின்இரவு 02.34 வரை பின்பு வளர்பிறை திரிதியை. உத்திரம் நட்சத்திரம் பகல் 03.55 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பகல் 03.55 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
மேஷ ராசி நேயர்களே:மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். ஒரு சிலருக்கு தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள்.
மிதுன ராசி காரர்களே:அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.சிலருக்கு வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும்,உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.பயணங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படும்.வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும்.
கடக ராசி நேயர்களே: உறவினர்கள் வீடு தேடிவருவார்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு.
சிம்ம ராசி அன்பர்களே: சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள்.சிலருக்கு வீண்செலவுகள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும்.கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம்.குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையக்கூடும்.உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உதவுவார்கள்.
கன்னி ராசி காரர்களே:நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லக் கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது.வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும்.
துலாராசி உறவுகளே:குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் நீங்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். மற்றவர்களுக்குக் கொடுத்து வராமல் இருந்த கடன் திரும்பக் கிடைக்கக்கூடும்.அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள் திடீர் பயணங்கள் இருக்கும். எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும்.ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.
விருச்சிக ராசி நேயர்களே:நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு.குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும்.சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சிலர் உங்களை நம்பிமுக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
தனுசு ராசி அன்பர்களே:தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை அளிக்கும்.சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். உறவினர் நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள்.பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை அளிக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.
மகர ராசி காரர்களே:வழக்கமான பணி களிலும் கூடுதல் கவனம் தேவைப்படும்.சிலர் உங்களை நம்பிமுக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். தந்தைவழி உறவுகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும்.ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை நீங்கும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.
கும்ப ராசி உறவுகளே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். மறதியால் பிரச்சினை வரக்கூடும். விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்பட்டு மனகுழப்பத்துடன் இருப்பீர்கள்.யாரையும் எளிதில் நம்ப வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம்.
மீன ராசி நேயர்களே:
மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். எதிரி களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும்.சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதுடன் அவர்கள் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.சகோதர வகையில் நன்மை உண்டு. குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.