இன்றைய ராசி பலன்!28.01.2020
இன்றைய பஞ்சாங்கம்: 28-01-2020, தை 14, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி காலை 08.22 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. சதயம் நட்சத்திரம் காலை 09.23 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷ ராசி நேயர்களே:
பொது காரியங்களில் ஈடுபட்டு சுற்றத்தாரின் பாராட்டைப் பெறுவீர்கள். தேவையான பணம் கையில் இருப்பதால், உற்சாகமாகச் சமாளித்துவிடுவீர்கள்.பெற்றோர்கள், நண்பர்கள் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.வெளியூர்களில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படும்.
ரிஷப ராசி அன்பர்களே:
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். சிலருக்கு திடீர் பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் ஆதாயம் உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும்.குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும்.
மிதுன ராசி காரர்களே:
துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள்.அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிக் கொள்வீர்கள். சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை காணப்படும்.வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் இழுபறிக்குப் பிறகு முடியும்.
கடக ராசி நேயர்களே:
சந்திராஷ்டமம் தொடர்வதால் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அவர்களுடைய பணிகளில் குறுக்கிடவேண்டாம். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் டென்ஷனை ஏற்படுத்தும்.
சிம்ம ராசி அன்பர்களே:
குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். கோபத்தை தவிர்க்கவும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் சோர்வு உண்டாகும்.
கன்னி ராசி காரர்களே:
சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம்.மாணவர்கள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்குச் சென்று வருவீர்கள்.. எதிர்பாராத பணவரவு உண்டு. சிலருக்கு கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும்.
துலாராசி உறவுகளே:
சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்வீர்கள்.அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
விருச்சிக ராசி நேயர்களே:
தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும்.வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.கலைப் பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள்.
தனுசு ராசி அன்பர்களே:
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி யுடன் செலவும் உண்டாகும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.உத்தியோகத்தில் மேலதிகாரி உதவி கிடைக்கும்.
மகர ராசி காரர்களே:
சிலருக்குக் குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்.சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.
கும்ப ராசி உறவுகளே:
சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும்.மாலையில் குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.யாரையும், யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள்.
மீன ராசி நேயர்களே:
யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வெளியூர்ப் பயணங் களைத் தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர் கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும்.வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும்.