இன்றைய ராசி பலன்! 31.05.2020
பஞ்சாங்கம்: 31.05.2020 வைகாசி மாதம் 18 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் அமிர்தமாகும். நவமி பின் பகல் 2.52 வரை உத்தரம் பின் இரவு 12.43 வரையாகும். சுப நேரம் காலை 8.52 – 10.22 வரையாகும். இராகுகாலம் மாலை 4.22 – 5.52 வரையாகும். எமகண்டம் காலை 11.52 – 1.22 வரையாகும். குளிகன் மதியம் 2.52 – 4.22 வரையாகும்.
மேஷ ராசி நேயர்களே: உங்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய நண்பர் களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். குடும்பத்தில் உங்கள் புகழ், கௌரவம் உயரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். திருமண காரியம் கைகூடும். இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாகும்.
ரிஷப ராசி அன்பர்களே குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வேற்றுமதத் தவர் உதவுவார். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் முன்னேற்றகரமான சம்பவங்கள் நிகழும். பண வரவில் இருந்த தடை நீங்கும். தம்பதியினருக்கு இடையில் அன்பு மேலோங்கும்.இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.
மிதுன ராசி காரர்களே: நீங்கள் தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. ஆன்மீக சிந்தனை ஏற்படும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். இன்றைய நாள் தன்னம்பிக்கை பெருகும் நாளாகும்.
கடக ராசி நேயர்களே: உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. காதல் திருமணம் நடைபெறும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு இலாபம் உண்டு. எதிலும் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு நுணுக்கங் களை கற்று கொள்வீர்கள். குடும்ப தேவைகள் அதிகரிக்கும். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு செய்யவும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.
சிம்ம ராசி அன்பர்களே: புது வீடு வாங்குவீங்கள். தம்பதியினருக்கு இடையில் விட்டு கொடுத்து செல்ல வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். தோற்றப்லிவுக்கூடும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமுண்டு. இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாகும்.
கன்னி ராசி காரர்களே: உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று நடத்தி முடிப்பது நல்லது. அடுத்தவர்கள் மனசு புண்படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். குடும்பத்தில் பழைய அமைதி மீண்டும் திரும்பும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய வாகனம் ஏற்படும். இன்றைய நாள் சமாளிக்க வேண்டிய நாளாகும்.
துலாராசி உறவுகளே: குடும்பத்தைப் பற்றிய கவலை இருக்கும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேச வேண்டாம். திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். பிள்ளைகள் பிடிவாத மாக இருப்பார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சகஊழியர்களால் பிரச்சினைகள் வரக்கூடும். இன்றைய நாள் தடைகளை தாண்டி முன்னேறும் நாளாகும்.
விருச்சிக ராசி நேயர்களே: உங்களுக்கு மற்றவருக்கு உதவும் குணம் இருக்கும். வீட்டில் புது பொருள் சேர்க்கை உண்டாகும். தம்பதியினருக்கு இடையில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். உங்கள் பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனை திருப்பி கொடுப்பீங்கள். பிரியமானவர்களுக் காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இன்றைய நாள் புகழ் கௌரவம் கூடும் நாளாகும்.
தனுசு ராசி அன்பர்களே: உங்கள் முன் கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய் வீர்கள். சிலர் உங்களை நம்பி பெரியபொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புது ஏஜென்சிஎடுப்பீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோ கத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.
மகர ராசி காரர்களே: குடும்பத்தில் பெரியளவில் மாற்றம் வரும். மனதில் உற்சாகம் பிறக்கும். பழைய பிரச்னைகளுக்கு புதிய முறையில் தீர்வு கிடைக்கும். தம்பதியினருக்கு இடையில் இருந்த மனப்போர் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே நிறைவேறும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.
கும்ப ராசி உறவுகளே: உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வ தால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துகொள்ளவில்லை என ஆதங்கப் படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். நீங்கள் தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். நண்பர்களால் செலவுகள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். இன்றைய நாள் நன்மை உண்டாகும் நாளாகும்.
மீன ராசி நேயர்களே: உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய் வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத் தில் உங்களின் திறமை வெளிப்படும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். யாரையும் விமசரித்து பேச வேண்டாம். உறவினர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.