இன்றைய ராசி பலன்! 29 .09.2019
புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.
29.09.2019 புரட்டாதி மாதம் 12 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் அமிர்தசித்தமாகும். பிரதமை முன் இரவு 10.02 வரை அத்தம் முன் இரவு 9.51 வரையாகும். சுப நேரம் காலை 9.02 – 10.32 வரையாகும். எமகண்டம் மதியம் 12.02 – 1.32 வரையாகும். இராகுகாலம் மாலை 4.32 – 6.02 வரையாகும். குளிகன் மதியம் 3.02 – 4.32 வரையாகும்.
மேஷ ராசி நேயர்களே: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிக இலாபம் ஏற்படும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். புதிய வீடு வாங்குவீங்கள். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.
ரிஷப ராசி அன்பர்களே: நீங்கள் குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள்.அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். புது வங்கி கணக்கு ஒன்றை தொடங்கி பணம் சேமிப்பீர்கள். வாழ்க்கை தரம் வெகுவாக உயரும். இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.
மிதுன ராசி காரர்களே: நீங்கள் நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவீங்கள். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.
கடக ராசி நேயர்களே: உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நிறைவேறும். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். மற்றவர்கள் ஆச்சரியப்படும்படி உங்கள் செயல்கள் இருக்கும். கைகூடாத சில காரியங்கள் கூட கைகூடி வரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாகும்.
சிம்ம ராசி அன்பர்களே: தம்பதியினருக்கு இடையில் இருந்த பிணக்குகள் நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உடல் நலம் சீராகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. இன்றைய நாள் மனசாட்சி படி செயல்படும் நாளாகும்.
கன்னி ராசி காரர்களே: உங்கள் ராசியில் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். கையில் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்ற துணிவு வரும். இன்றைய நாள் நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாளாகும்.
துலாராசி உறவுகளே: நீங்கள் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. சகோதரர்கள் வகையில் நன்மை உண்டு. மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்றைய நாள் போராடி வெல்லும் நாளாகும்.
விருச்சிக ராசி நேயர்களே: உங்கள் குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். யாரையும் எடுத்துதெரிந்து பேச வேண்டாம். வெளியில் சென்று வரும் யோகம் உண்டு. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீங்கள். இன்றைய நாள் புகழ், கௌரவம் கூடும் நாளாகும்.
தனுசு ராசி அன்பர்களே: உங்கள் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். நண்பர்கள் ஆதரவாகப்பேசத் தொடங்குவார்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். குடும்ப நபர்களை அனுசரித்து போகவும். பெற்றோர்கள் வழியில் நன்மை உண்டு. பொருளாதார நெருக்கடி குறைந்து நிலைமை சீரடையும். இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.
மகர ராசி காரர்களே: தம்பதியினருக்கு இடையில் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் இலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிலும் நேர் வழியில் செல்ல விரும்புவீர்கள். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். இன்றைய நாள் இனிமையான நாளாகும்.
கும்ப ராசி உறவுகளே: உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். அடுத்தவர்களை குறைக்கூறுவதை நிறுத்துங்கள். உங்கள் திறமையை சிலர் குறைத்து மதிப்பிடுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் அதிக இலாபம் கிடைக்கும். தம்பதியினருக்கு இடையில் நல்ல புரிதல் இருக்கும். இன்றைய நாள் வெற்றி அடையும் நாளாகும்.
மீன ராசி நேயர்களே: உங்கள் பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். உறவினர்கள் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள். நல்ல செய்தி ஒன்று காதில் வந்து விழும். புதிய வீடு வாங்குவீங்கள். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.